ADVERTISEMENT

குழந்தையின் தலையை கவ்விக்கொண்டு வந்த நாய்... நரபலியா?

06:08 PM Sep 09, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மதுரை பி.பி.குளம் பகுதியில் பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளங்குழந்தையின் தலையை நாய் தூக்கிவந்த சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்பொழுது போலீசாரின் விசாரணை இது நரபலியா? என்பதை நோக்கித் திரும்பியுள்ளது.

நேற்று மதுரை பி.பி.குளம் உழவர் சந்தை பகுதியில் நாய் ஒன்று பிறந்து ஒரே நாளான பச்சிளங் குழந்தையின் தலையைக் கவ்விக்கொண்டு வந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். செல்லூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அந்த பகுதியில் வங்கியில் பணம் எடுக்கச் சென்ற நிலையில் இந்த சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ந்துள்ளார். உடனே குழந்தையின் தலையைக் கவ்விக்கொண்டு வந்த நாயைத் துரத்திவிட்டு குழந்தையின் தலையை மீட்டுள்ளார். அந்த இடத்திலேயே நின்று கண்காணித்துக் கொண்டே காவல் நிலையத்திற்கு அந்த இளைஞர் தகவல் தெரிவிக்க போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் குழந்தையின் தலை ஒரு அட்டைப் பெட்டியில் சேகரித்த போலீசார் அதனைக்கொண்டு விசாரணை நடத்தினர்.

பிறந்த குழந்தையின் தலையை நாய் எடுத்துவந்த வந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கைப்பற்றப்பட்ட குழந்தையின் தலை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. குழந்தையின் தலை சாக்கடையில் நனைந்ததைப்போல் இருந்ததால் தலை கண்டெடுக்கப்பட்ட பகுதியில் உள்ள மழைநீர் வடிகாலில் குழந்தையின் உடலைத் தேடிவருகின்றனர். மேலும் தலை மட்டும் தனியாகத் துண்டிக்கப்பட்டிருப்பதால் இது நரபலியாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் தல்லாகுளம் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT