ADVERTISEMENT

உலகப்புகழ் பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் - தேதி அறிவிப்பு!

08:53 AM Feb 20, 2022 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில், பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றம் இன்று நடைபெறுகிறது. அதனையொட்டி உலகப்புகழ் பெற்ற திருவாரூர் ஆழி தேரோட்டம் வரும் மார்ச் 15 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் தேர், ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராகும். இத்தேரோட்டத்தைக் காண உலகமெங்கிலுமிருந்து பக்தர்கள், சுற்றுலா பயணிகள் திருவாரூருக்குப் படையெடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டுமானப்பணிகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.

கரோனா பரவல் குறைந்துள்ளதால், கடந்த முறையைவிட இம்முறை தேர் திருவிழா தொடர்பான கட்டுப்பாடுகள் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT