Skip to main content

பல்கலைக் கழக தேர்வில் ஆள்மாறாட்டம்! பாஜக மாவட்டத் தலைவர் கைது! 

Published on 16/08/2022 | Edited on 16/08/2022

 

Impersonation in the university exam! BJP district president arrested!

 

 

தமிழ்நாடு திறந்த வெளி பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுதியதில் ஆள்மாறாட்டம் செய்து கைதாகியிருக்கிறார் மாவட்ட பாஜக தலைவர். இந்த சூழலில் ஆள்மாறாட்டத்திற்கும் பாஜக மாவட்ட தலைவருக்கும் தொடர்பில்லை எனக் கருப்பு முருகானந்தம் போராட்டம் அறிவித்திருப்பது மீண்டும் திருவாரூர் பகுதியில் பரபரப்பாகியிருக்கிறது.

 

திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு திறந்த வெளி பல்கலைக்கழகத்தின் தேர்வு நடைபெற்றது. திறந்தவெளி பல்கலையில் பொலிட்டிக்கல் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்துவரும் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் எழுத வேண்டிய தேர்வை, அவருக்குப் பதிலாக திவாகர் மாதவன் என்பவரை கொண்டு எழுதியுள்ளார். இந்த ஆள்மாறாட்டம் ஆதாரங்களோடு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து முறைகேடாக தேர்வு எழுதிய திவாகர் மாதவன், அவருக்கு உதவிய மாவட்ட பாஜக கல்வியாளர் பிரிவு செயலாளர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பாஜக மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டார்.

 

இந்நிலையில் ஆள்மாறாட்ட முறைகேட்டிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என மாவட்டத் தலைவர் பாஸ்கர் மறுப்பு தெரிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் கூறிய போது, "தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் மீது குற்றம்சாட்டி செய்திகள் வெளியாகி வருகிறது. இது முற்றிலும் பொய்யானது. இந்த குற்றச்சாட்டுகளை மாவட்ட தலைவர் பாஸ்கர் முழுமையாக மறுத்துள்ளார். இந்த விவகாரத்தில் காவல்துறை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பாளரிடம் நாங்கள் புகார் அளித்துள்ளோம். யார் தவறு செய்திருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாநில தலைவர் உறுதியாக உள்ளார். இந்த விவகாரத்தில் திமுகவுக்கு தொடர்பு இருக்குமோ என்கிற சந்தேகம் எங்களுக்கு உள்ளது. எனவே போலீசார் இந்த வழக்கை உரிய முறையில் விசாரிக்க வேண்டும்" என்றார். 

 

அதேபோல், பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாளை 17ம் தேதி ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாக கருப்பு முருகானந்தம் அறிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.