ADVERTISEMENT

விவசாய நிலத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட கோரி 2 வது நாளாக பெண்கள் போராட்டம்; போலீசார் காலில் விழுந்து பெண்கள் கோரிக்கை...

04:14 PM May 14, 2019 | tarivazhagan

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பியில் கடந்த பல ஆண்டுகளாக அரசு டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து அந்த கடையை மூடிய டாஸ்மாக் நிர்வாகம் பொன் குடிக்காடு கிராமத்தில் உள்ள விவசாய நிலப் பகுதியில் புதிய கடை திறக்க முயற்சி செய்தது. அதனை அப்பகுதி பெண்கள் போராட்டம் நடத்தி மூடினார்கள்.


அந்த போராட்டத்தை தொடர்ந்து அருகே உள்ள சிறுகளத்தூர் கிராமத்தில் அப்போது மக்களின் எதிர்ப்பையும் மீறி விவசாய நிலத்தில் புதிதாக கட்டடம் கட்டப்பட்டு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென டாஸ்மாக் கடை முன்பு அப்பகுதி பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் மற்றும் அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு இளஞ்செழியன், வருவாய்த் துறையினர் விரைந்து வந்து போராட்டக்காரர்களை தடுக்க முயன்றனர். ஆனால் அதையும் மீறி டாஸ்மாக் கடை முன்பு திரண்ட பெண்கள் டாஸ்மாக் கடையை சூறையாட முயன்றனர்.

பெண்களின் ஆவேச போராட்டத்தை தொடர்ந்து டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில் இந்த டாஸ்மாக் கடையால் தான் பொன்பரப்பியில் கலவரம் ஏற்பட்டது. இப்பகுதி பெண்கள் இரவு நேரங்களில் நடமாட முடியவில்லை. விவசாய நிலங்களுக்கு செல்ல முடியவில்லை. விவசாயப் பகுதிகளில் ஆங்காங்கே மதுப்பிரியர்கள் குடித்து விட்டு பாட்டிலை போட்டு உடைப்பதோடு அங்கு வரும் பெண்களையும் ஆபாசமாக பேசுகின்றனர். இந்த கடை வந்த பின்னர் இப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மதுவால் உயிரிழந்துள்ளனர். ஆகையால் இந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும். இல்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்
.


நேற்றைய போராட்டத்தை தொடர்ந்து இன்று உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது‌. பேச்சுவார்த்தை முடிவில் மூன்று மாதத்தில் டாஸ்மாக் கடை மூடப்படும் என்று கோட்டாட்சியர் கூறினார். ஆனால் போராட்டக்காரர்கள் 10 தினங்களுக்குள் மூட வேண்டும் என்று கூறி வெளியேறினர்.

அதன் பின்னர் அங்கிருந்து டாஸ்மாக் கடைக்கு விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கு பெண்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சில பெண்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் காலில் விழுந்து இந்த கடையை உடனடியாக மூடுங்கள் என்றனர். போலீசார் விரைவில் டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT