ADVERTISEMENT

சேலத்தில் சென்னையை சேர்ந்த கேட்டரிங் தொழில் அதிபர் மனைவி, மகளுடன் விஷம் குடித்து தற்கொலை!

11:27 PM Apr 11, 2019 | elayaraja

சேலத்தில் தனியார் தங்கும் விடுதியில் சென்னையைச் சேர்ந்த கேட்டரிங் தொழில் அதிபர் மனைரி, மகளுடன் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தற்கொலை முயற்சியில் உயிர் பிழைத்த மற்றொரு மகளுக்கு தீவிர சிகிச்சை அளி க்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை சூளைமேடு பாலாஜி பவன் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (60). சென்னையில் சொந்தமாக கேட்டரிங் தொழில் செய்து வந்தார். இவர் புதன்கிழமை (ஏப்ரல் 10, 2019) அன்று தனது மனைவி அனுராதா (55), மகள்கள் ஆர்த்தி (22), ஆஷிகா (20) ஆகியோருடன் சேலம் வந்திருந்தார். நால்வரும் மாலை 4 மணியளவில், சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள செல்வம் ஹோட்டல் என்ற தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர்.

இவர்களில், இவர்களில் ஆர்த்தி, பி.ஏ., ஆங்கில இலக்கியம் படித்துள்ளார். ஆஷிகா, திண்டுக்கல் பொறியியல் கல்லூரியில் பி.இ., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், வியாழக்கிழமை (ஏப்ரல் 11) காலை 10.30 மணியளவில், விடுதி வரவேற்பறைக்கு போன் செய்த ஆர்த்தி, அறைக்கதவை திறக்க முடியவில்லை. வந்து கதவை திறந்து விடுங்கள் என்று கூறினார். விடுதி ஊழியர்கள் விரைந்து சென்று அந்த அறைக்கதவை திறந்தனர்.

அப்போது உள்ளே, விஜயகுமார், அனுராதா, ஆஷிகா ஆகிய மூன்று பேரும் சடலமாகக் கிடந்தனர். ஆர்த்தி மட்டும் தடுமாறிய நிலையில், நின்று கொண்டிருந்தார். ஊழியர்கள் உடனடியாக ஆர்த்தியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். மாநகர காவல்துறை துணை ஆணையர் தங்கதுரை, உதவி ஆணையர் செல்வராஜ், அழகாபுரம் காவல் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் காவலர்கள் நிகழ்விடம் வந்து விசாரித்தனர்.

முதல்கட்ட விசாரணையில், அவர்கள் குளிர்பானத்தில் பூச்சி மருந்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அந்த அறையில் இருந்து ஒரு கடிதத்தையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.

அதில், ''கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொள்கிறோம்'' என்று குறிப்பிட்டு இருந்தனர். மேலும், அந்த கடிதத்தில், கடன் கொடுத்தவர்கள் பெயர்களையும், உறவினர்கள் சிலரின் செல்போன் எண்களையும் குறிப்பிட்டு இருந்தனர். இதையடுத்து காவல்துறையினர் உறவினர்களுக்கு தகவல் அளித்தனர்.

மூன்று பேரின் சடலங்களும், சேலம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில் ஆர்த்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்கொலை முடிவு எடுத்த நிலையில், பூச்சிக்கொல்லி மருந்து கலந்த குளிர்பானத்தை குடித்த ஆர்த்தி, கை நரம்புகளையும் அறுத்துள்ளார். கழுத்தும் நெரிக்கப்பட்டதற்கான அடையாளம் உள்ளது. விஷம் குடித்தும் சாகாததால், தூக்கிட்டும், கை நரம்புகளை அறுத்தும் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. கடிதத்தில் இதுபற்றி விரிவாக எழுதி வைத்திருப்பதாகவும் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

அவரிடம் சூரமங்கலம் காவல் ஆய்வாளர் வளர்மதி விசாரணை நடத்தி வருகிறார். கந்துவட்டி கொடுமையினால் ஊரைவிட்டே ஓடி வந்து இவர்கள் இவர்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டார்களா என்றும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

அதேநேரத்தில், குடும்பத் தகராறில் இந்த சம்பவம் நடந்ததா? அல்லது காதல் விவகாரத்தில் நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

இறந்தவர்களில் ஒருவரான ஆஷிகா, கையில் பிளேடால் அறுத்துள்ளார். அவர் படுத்திருந்த படுக்கை மற்றும் உடை முழுவதும் ரத்தம் பரவி இருந்தது. அதிலிருந்து அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டதால்தான் அவர் இறந்திருக்கலாம் எனத் தெரியவருகிறது. இதன்மூலம் கடன் தொல்லை மட்டும்தான் இந்த தற்கொலைகளுக்கு காரணமாக என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது..

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT