கடலூரில் கணவனை கொலை செய்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கொலை செய்த மனைவியையும், அதற்கு உதவியது அந்த பெண்ணின் கணவருடைய சகோதரரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகை மாவட்டம் கூழையாறை சேர்ந்தவர் முருகதாஸ். இவருக்கும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பரங்கிப்பேட்டை அடுத்த சி.புதுக்குப்பம் என்ற பகுதியைச் சேர்ந்த சுமிதா என்பவருக்கும் கடந்த 2001ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. கடலூர் துறைமுகம் அருகே உள்ள முத்துநகர் சிங்காரத்தோப்பு என்ற இடத்தில் திருமணத்திற்குப் பிறகு வசித்துவந்தனர். இவர்களுக்கு 2 மகன்களும் இருந்த நிலையில் இதனையடுத்து வெளிநாட்டிற்குச் சென்று சம்பாதிக்கலாம் என்று நினைத்த முருகதாஸ் சவூதி அரேபியாவிற்கு சென்று வேலை பார்த்து வந்தார்.
அங்கு சென்ற தனிப்படை போலீசார் இருவரையும் பிடித்து செவ்வாய்க்கிழமையன்று கடலூருக்கு அழைத்துச் வந்தனர். கைதுசெய்யப்பட்ட இருவரிடமும் கடலூர் துணை சூப்பிரண்டு சாந்தி விசாரணை மேற்கொண்டபோது முருகதாஸ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவர் வெளிநாட்டில் செய்து கொண்டிருந்த நேரத்தில் அவரது வீட்டிற்கு சகோதரர் சுமேர் அடிக்கடி சென்றதன் காரணமாக அண்ணியுடன் நெருக்கமாக பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இது தவறாக உறவாக மாறியுள்ளது.
இதனை கடந்த 2013 ஆம் ஆண்டு சொந்த ஊருக்கு வந்தபோது முருகதாஸின் கவனத்திற்கு வர மனைவியையும், அவரது சகோதரரையும் கண்டித்துள்ளார். இதனால் தங்களது உறவுக்கு முருகதாஸ் தடையாக இருப்பார் என எண்ணி இருவரும் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் புதைத்ததாக வைத்துள்ளனர். இந்நிலையில் முருகதாஸின் உடல் புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் ஒரு வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
அவற்றை ஆய்வுக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் முருகதாஸை கொன்ற மனைவி சுதாவையும், சகோதரரையும் கைது செய்துள்ளனர். 6 ஆண்டுகளுக்குப் பிறகு மனைவி கணவனை கொலை செய்தது தெரியவந்ததும், இதுதொடர்பாக கைது செய்யப்பட்டதும், சடலம் தோண்டி எடுக்கப்பட்டதும் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.