ADVERTISEMENT

எப்போது தேர்தல் வந்தாலும் 234 தொகுதிகளிலும் அ.ம.மு.கதான் வெற்றி பெறும்! டிடிவி பகீர் பேச்சு!!

09:29 PM Nov 11, 2018 | sakthivel.m

ஆண்டிபட்டியை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை நான்கு ரோட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உண்ணாவிரத போராட்டத்தம் போராட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த உண்ணாவிரதப்போராட்டத்திற்காக தகுதி நீக்கம் செய்ய பட்ட எம்எல்ஏ தங்கத்துரை சுமார் 2 ஆயிரம் சேர் வரை போட்டு பந்தல் அமைத்து இருந்தார்.அதுபோல் இந்த உண்ணாவிரத போராட்டத்தை தங்கதமிழ்செல்வன் தொடக்கி வைப்பதாக இருந்தது ஆனால் அவர் திடீரென வரவில்லை என்பதால் தங்கத்துரையே உண்ணாவிரதத்தை தொடக்கி வைத்து விட்டார்.

இருந்தாலும் உள்கட்சிகுள்ளையே கோஷ்டிபூசல் தலைவிரித்து ஆடிவருவதால் தங்கத்துரைக்கு எதிராக உள்ள கட்சி பொறுப்பாளர்களும் தொண்டர்களும் உண்ணாவிரத்திற்காக வந்தும் கூட உண்ணாவிரத பந்தலுங்கு வராமல் அங்கங்கே ஓரம்சாரங்களில் நின்று இருந்தனர். அதனால் உண்ணாவிரத பந்தலில் குறைந்த அளவிலே கட்சிகாரர்கள் உட்கார்ந்து இருந்ததால் பெரும்பாலான சேர்கள் காலியாக தான் இருந்தது.

அது போல் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்கத்துரையோடு மேலும் முன்று பேர் தான் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனரே தவிர பெரும்பாலன தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் வரவில்லை. இந்த நிலையில்தான் உண்ணாவிரதத்தை முடித்து வைக்க டிடிவியுன் தங்கதமிழ் செல்வனும் மாலை ஐந்து மணிக்கு மேல் வந்தபோது உள்கட்சி கோஷ்டிபூசலால் அங்கங்கே ஒதுங்கி நின்று கொண்டிருந்த கட்சி பொறுப்பாளர்கள் எல்லாம் வந்து டிடிவியிடம் ஆஜராகி விட்டனர்.

இந்தஉண்ணாவிதர போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய டிடிவி தினகரனோ....தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது 234 தொகுதிகளிலும் எப்ப தேர்தல் வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் வெற்றிபெறும். எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியை யாரால் தக்க வைக்கிறார் என்பது மக்களுக்கு தெரியும். சின்னம்மா தயவால் இந்த ஆட்சி நீடித்து வருகிறது. அப்படி இருக்கும் போது என்னை பார்த்து துரோகி என்கிறார். தமிழக மக்களுக்கு யார் துரோகி என்று விரைவில் தெரியும்.

1996 தேர்தலை தவிர அனைத்து தேர்தலிலும் நிலக்கோட்டை தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. முதல்வரை மாற்றும் வரை நான் ஓய மாட்டேன். நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ பன்னீர்செல்வம் உட்பட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். வருகின்ற இடைத்தேர்தலில் நிலக்கோட்டை தொகுதியில் அதிமுக டெபாசிட் இழக்கும். ஆர்கே நகர் தொகுதி போல் 18 தொகுதி உட்பட 20 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெறும்.

எத்தனை கோடி செலவு செய்தாலும் அதிமுக ஆட்சிக்கு வரமுடியாது. ஆர்கே நகர் தொகுதி போல் அதிமுகவினரை ஓட ஓட விரட்டுவோம். தொகுதி மக்களை புறக்கணித்த இந்த நிலக்கோட்டை தொகுதியில் வரும் தேர்தலில் குக்கர் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்று கூறி உண்ணாவிரத்தை முடித்து வைத்து வைத்து விட்டு புறப்பட்டார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT