Skip to main content

தினகரன் அணியின் ஸ்லீப்பர் செல் மார்க்கண்டேயன்..?

Published on 23/12/2018 | Edited on 23/12/2018

சில வாரங்களுக்கு முன்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூவை, தினகரன் அணியின் ஸ்லீப்பர் செல் என்று மாஜி எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஓபிஎஸ் தலையிட்டு, மார்க்கண்டேயனுக்கு செய்தி தொடர்பாளர் பதவியையும் பெற்றுக் கொடுத்தார். இதையடுத்து, அமைச்சர் கடம்பூர் ராஜூ ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு, எங்களுக்குள் எந்த சர்ச்சையும் இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தினர்.

.  

admk

 

இந்நிலையில், இன்று விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட புதூரில் அதிமுக கூட்டத்தில் மார்க்கண்டேயன் ஆதரவாளர்களும், கடம்பூர் ராஜூவின் ஆதரவாளர்களும் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில், கட்சிக்காரர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது, தினகரன் அணிக்காக வேலை பார்க்கிறாரா மார்க்கண்டேயன்? என்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

admk

 

இதுதொடர்பாக அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம், "அண்மையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தேர்தல் ஆலோசனை கூட்டத்திற்கு வந்தபோது, விளாத்திகுளத்தில் மாஜிக்கள் மார்க்கண்டேயன், சின்னப்பன் இதில் யாருக்கு சீட்டு கொடுத்தால் வெற்றி வாய்ப்பு என்று கேட்டார். இதில் 10-ல் 8 பேர் மார்க்கண்டேயனுக்கே வாய்ப்பு என்று தெரிவித்தோம். இதனால் எல்லோரும் சேர்ந்து கட்சிப் பணியாற்றுங்கள் என்று சொன்னார். ஆனால் மொத்தத்தையும் மார்க்கண்டேயன் கெடுத்துவிட்டார்' என்றனர்.

 

 

ஏன் இந்த மோதல் அடிதடி என்று முக்கிய நிர்வாகி நம்மிடம் விவரித்தார், "அதாவது விளாத்திகுளம் தொகுதிக்கு போடப்பட்ட பொறுப்பாளர்கள் சிலரை மாற்ற வேண்டும் என மாவட்ட செயலாளர் சி.த.செல்லபாண்டியனிடம், மார்க்கண்டேயன் கோரிக்கை வைத்தார். அதை மா.செ. ஏற்கவில்லை. இதனால், வம்பு இழுக்க வேண்டும் என்பதற்காகவே நூற்றுக்கும் மேற்பட்டவர்களை மார்க்கண்டேயன், இன்றைய கூட்டத்திற்கு அழைத்து வந்துள்ளார். 

 

 

கூட்டம் ஆரம்பித்த உடனே மார்க்கண்டேயனின் ஆதரவாளர்கள் ரகளையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் புதூர் முன்னாள் சேர்மன் தனஞ்செயனின் வேட்டியை உருவ முயன்றனர். இதனால் கூட்டத்தில் ரசாபாசம் உருவானது. ஒட்டப்பிடாரம் முன்னாள் சேர்மன் காந்தி காமாட்சி, விளாத்திகுளத்தை சேர்ந்த குரங்கு முருகன் உள்ளிட்டோர் கடும் ரகளையில் ஈடுபட்டபோது, அதை மார்க்கண்டேயன் வேடிக்கை பார்த்தாரே தவிர, அவர்களை அமைதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் கடம்பூர் ராஜூ கீழே இறங்கி வந்து சமாதானப்படுத்தினார். இதனால் மார்க்கண்டேயன் தான் தினகரன் அணியின் ஸ்லீப்பர் செல்லா இருப்பாரோ? என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது "என்றார்.

 

admk

 

விளாத்திகுளத்தை பொறுத்தவரை அதிமுகவிற்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மார்க்கண்டேயனுக்கு தான் சீட் என்றும் பரவலாக பேசப்படுகிறது. ஆனால், அதை உதாசீனப்படுத்தும் வகையிலே, இன்று மார்க்கண்டேயன் நடந்திருக்கிறார். கூட்டத்தில் மார்க்கண்டேயனை, செல்லப்பாண்டியன் கடுமையான வார்த்தைகளால் எச்சரிக்க, கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் மார்க்கண்டேயன்.

 

 

அ.ம.மு.கவின் தென் மண்டல பொறுப்பாளரான மாணிக்க ராஜாவும், மார்க்கண்டேயனும் நெருங்கிய நண்பர்கள். ஒருவேளை இடைத் தேர்தலில் ஜெயித்து அ.ம.மு.கவிற்கு மார்க்கண்டேயன் தாவி விடுவாரோ? அல்லது தேர்தலுக்கு முன்னதாகவே அணி மாறிடுவாரோ? என்ற சந்தேகம் கிளை செயலாளர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தனி ஒருவனாக குரல் கொடுத்தேன்” - விஷால் பகிர்வு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
vishal political speech latest in rathnam promotion event

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

ad

அந்த வகையில் திருச்சியை அடுத்த சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில்  இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றினர். பின்னர் விஷால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ரத்னம் திரைப்படம் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 'சென்ட்ரல் போர்டு ஆப் பிலிம் சர்டிபிகேஷன்' மும்பையில் என்னிடம் லஞ்சம் கேட்டார்கள். அதனை எதிர்த்து தனி ஒருவனாக குரல் கொடுத்தேன். அதன் பிறகு, சிபிஐ நடவடிக்கை எடுத்தார்கள்.

சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்றால் மற்றவர்கள் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம் . 'வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுத்தது மக்களுடைய பணம் தான். ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் தான் சம்பளம் என நினைக்கிறேன். பிறகு எப்படி இவர்களால் வாக்குக்கு இவ்வளவு பணம் என கொடுக்க முடிகிறது. இதன் பிறகு மக்களை ஏமாற்ற முடியாது” என்றார். 

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.