ADVERTISEMENT

சர்ச்சையை ஏற்படுத்திய திருமண பேனர்... புதுமாப்பிள்ளையிடம் விசாரணை!

04:33 PM Jul 06, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சில ஆண்டுகளாகவே பேனர் கலாச்சாரம் என்பது அரசியலில் மட்டுமல்லாது குடும்ப நிகழ்வுகளிலும் தலையெடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக திருமண விழாக்களில் நண்பர்கள் வைக்கும் பேனர்கள் சில நேரங்களில் சிரிப்பை ஏற்படுத்தும் வகையிலிருந்தாலும் சிலவை சர்ச்சையில் சிக்கும். அப்படி ஒரு திருமண பேனர் தற்பொழுது சர்ச்சையில் சிக்கி மணமகனை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அடுத்த திங்கள்நகரில் வைத்த அந்த ஒரு கல்யாண பேனர் தான் அது. இந்து கடவுள் சிவபெருமான் சிகரெட் பற்றவைத்து புகைபிடிப்பதை போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ள அந்த திருமண பேனர் சர்ச்சையை ஏற்படுத்த சில இந்து அமைப்புகள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தன. இந்நிலையில் பேனரை வைத்த நண்பர்களிடமும், புதுமாப்பிள்ளையிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT