ADVERTISEMENT
ADVERTISEMENT
வைகை அணையில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஐந்து மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தேனியில் நேற்று மூன்று மணிநேரம் பெய்த தொடர் மழையின் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. 71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணை தற்போது 69 அடி நிரம்பியுள்ளதால் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.
தற்போது வைகை அணையிலிருந்து 4 ஆயிரத்து 260 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கையில் உள்ள வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
Show comments