Skip to main content

தொடங்கிய வாக்குப்பதிவு.... வாக்குச்சாவடியில் பிரபலங்கள்!

Published on 06/04/2021 | Edited on 06/04/2021

 

Voting started .... Celebrities at the polls!

 

தமிழகத்தில் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு என்பது சரியாக இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிற நிலையில், 1.5 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3,585 ஆண் வேட்பாளர்களும், 411 பெண் வேட்பாளர்களும், இரண்டு மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

 

இந்நிலையில் திநகர் வாக்குச்சாவடியில் தந்தை சிவகுமார், தம்பி கார்த்தியுடன் வாக்களிக்க நடிகர் சூர்யா வரிசையில் நின்றார். அதேபோல் நடிகர் ரஜினிகாந்தும் அவரது தொகுதியில் வாக்கினை பதிவு செய்ய வாக்குச்சாவடிக்கு வந்தார்.பின்னர் தனது வாக்கினை பதிவு செய்தார்.

 

 

சார்ந்த செய்திகள்