ADVERTISEMENT
நாடு முழுவதும் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 12ஆம் தேதி சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் தேசிய இளைஞர் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களிலும் விவேகானந்தரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
ADVERTISEMENT
அந்த வகையில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்ல வளாகத்தில் அமைந்திருக்கும் விவேகானந்தரின் சிலைக்கு தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் சார்பில் மாநில தலைவர் எம்.எம்.ஆர். மதன் மற்றும் இளைஞர்களுடன் விவேகானந்தரின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதே போல் பள்ளி மாணவர்களும் விவேகானந்தர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
Show comments