ADVERTISEMENT

''என் குரல் கேக்குதா மக்களே... எல்லோரும் சாப்டுட்டுதான் போகணும்...''-தொண்டர்களை நெகிழவைத்த விஜயகாந்த்!! 

01:59 PM Jan 31, 2020 | kalaimohan

தேமுதிக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப்பெற்றவர்களுக்கான பாராட்டு விழா மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்தின் திருமணநாள் விழா இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற விஜயகாந்த் பேசுகையில்,

ADVERTISEMENT

ADVERTISEMENT

''என் குரல் கேக்குதா மக்களே... எப்படி என் குரல் நல்லா இருக்கா... தேர்தலில் வெற்றிபெற்ற எல்லாருக்கும் என் வாழ்த்துக்கள், வணக்கம். மக்களுக்கு நல்லது செய்வதற்காக வருவேன். சீக்கிரம் வருவேன், மீண்டும் வருவேன், நிச்சயமாக வருவேன்... எல்லோரும் சாப்டுடுதான் போகணும். சாப்பாடு எல்லாம் ஏற்பாடு பண்ணிருக்கு என கூறிக்கொண்டு உங்களிடம் இருந்து விடைபெறுவது உங்கள் விஜயகாந்த்'' என்றார். அவரது இந்த பேச்சை கேட்ட தொண்டர்கள் மற்றும் கூடியிருந்த மக்கள் நெகிழ்ச்சியில் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT