ADVERTISEMENT

இளைஞர்களின் திடீர் போராட்டம் - இழுத்து சென்ற போலீஸ்

12:36 PM May 21, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அண்ணா பேருந்து நிலையம் முன்பாக மே 21 ந்தேதி காலை 10 மணியளவில், திடீரென முன்னாள் கல்லூரி மாணவர்கள் 4 பேர், தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் உட்பட சில மாவட்டங்களில் 100 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கிய பாஜக, அதிமுக அரசை கண்டித்து, பதாகைகளை கையில் ஏந்தி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

போராட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர். ஏராளமான மக்கள் சுற்றி நின்று பார்த்தனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் நகர போலீசார் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 4 இளைஞர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த 4 இளைஞர்கள் மீது அனுமதியின்றி போராட்டம் நடத்தியது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT