ADVERTISEMENT

"தேசியக் கொடியை மதிப்போம், திராவிடக் கொடியும் பிடிப்போம்" - வைரமுத்து ட்விட்!

11:44 AM Aug 01, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

தேசியக் கொடியை மதிப்போம், திராவிடக் கொடியும் பிடிப்போம் என்று கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

கடந்த 34 ஆண்டுகளாக கல்விக்கொள்கையில் மாற்றம் ஏதும் செய்யப்படாமல் இருந்த சூழலில், கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் பெயரில், இந்தியக் கல்விக்கொள்கையை மாற்றியமைத்துள்ளது, மத்திய அரசு. அதன்படி புதிய கல்விக் கொள்கை அறிவிப்புகளை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. தமிழகத்தில் பிரதான கட்சிகள் இந்த புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து வருகின்றன, சிலர் ஆதரிக்கவும் செய்கின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அண்ணா - கலைஞர் இறுதி செய்ததும், எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா உறுதி செய்ததும் இருமொழிக் கொள்கைதான். முதலமைச்சர் பழனிசாமி அரசும் அதைத் தாங்கி பிடிக்க தயங்க தேவையில்லை. தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT