Skip to main content

பினராயி விஜயனுக்கு நெருக்கடி தருவது சங்பரிவார் மற்றும் பாரதீய ஜனதா கட்சி: திருமாவளவன்

Published on 21/10/2018 | Edited on 21/10/2018
Thol. Thirumavalavan



கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
 

அப்போது அவர், ''சபரிமலை தீர்ப்பு பாலின சமத்துவம் தொடர்பான தீர்ப்பு. இந்த பிரச்சினையில் பெண்கள் என்ற வகையில் தான் பார்க்க வேண்டுமே தவிர மதம், சாதி, கட்சி, இயக்கம் என்ற பின்னணிகளை இதில் பொருத்தி பார்க்க தேவையில்லை.
 


ஐயப்ப பக்தர்களில் ஆண்களில் கூட பிற மதத்தையோ கட்சியோ சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். அப்படியிருக்கும் சூழலில் வழிபட வந்தவர்களை கேரள அரசும் காவல்துறையும் திருப்பி அனுப்பியது சட்டப்பூர்வ அனுகுமுறை அல்ல

.

கேரள அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதே பொறுப்பும் கடமையும். அதை நடைமுறைப்படுத்த விடாமல் பினராயி விஜயனுக்கு நெருக்கடி தருவது சங்பரிவார் மற்றும் பாரதீய ஜனதா கட்சி. 
 

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதரீதியிலான வாக்கு வங்கி திரட்டுவதற்காக சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக மாற்றுமத பெண்கள் வந்தார்கள் என்பதற்காக பாஜக பிற மத பெண்களை அங்கு அனுப்பி வைத்து குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
 

சபரிமலைக்கு செல்ல முயன்ற ரிஹானா என்ற பெண் பாஜக அமைச்சர்களுக்கு நன்கு அறிமுகமானவர். அவர்களுடன் படமெடுத்து கொண்டவர். ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக வை சேர்ந்தவர்கள் அது போன்ற பெண்களை சபரிமலைக்கு  அனுப்பி வைத்து குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.
 

பாலின சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில் தான் நீதிபதிகள் இத்தீர்ப்பை எழுதியிருக்கிறார்கள். பாரம்பரியம் மற்றும் ஐதீகம் என்ற பெயரால் சமத்துவத்திற்கு எதிரான போக்கை அனுமதிக்க முடியாது

வைரமுத்து மீதான புகார் தொடர்பாக  விசாரிக்க திரைப்பட துறையில் குழு அமைக்கப்படும் என சொல்லப்படுகிறது. இதனை விசாரிக்க அரசுக்கும் பொறுப்பு இருக்கிறது. ஆண்களுக்கு எதிரான தாக்குதல் என அணுக முடியாது. இது போன்ற புகார்களை  கவனிக்க, ஆராய்ந்து உண்மை நிலையை கண்டறிய மத்திய மாநில அரசுகள் சிந்திக்க வேண்டும்.

 

பெண் ஒடுக்குமுறையின் எதிர்விளைவுதான் மீ டூ. பெண்கள் தங்கள் வலிகளையும் வடுக்களையும் பதிவு செய்யும் களமாகத்தான் இதை பார்க்க வேண்டும. மீடூ வில் பெண்களின் பல ஆண்டு தாமதமான கருத்து பதிவு குறித்து, அன்று பேசக்கூடிய துணைச்சல் சூழல் இல்லாமல் இருந்திருக்கலாம். அந்த வலியும் வடுவும் கடுமையாக இருந்திருக்கலாம்'' என கருத்து தெரிவித்தார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாரதிதாசனை தி.மு.க குறியீடாக சுருக்கிவிட்டனர்” - வைரமுத்து  

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
vairamuthu about bharathidasan

பாவேந்தர் பாரதிதாசனின் 134வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள பாரதிதாசனின் உருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இதனிடையே பாரதிதாசன் குறித்த நினைவுகளை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக முதல்வர், மு.க.ஸ்டாலின், தமிழக சார்பில் மரியாதை செய்யப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்து, “தமிழ்எங்கள் உயிரென்ப தாலே - வெல்லுந்தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே

பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலியெனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!

எனக் கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி பாவேந்தருக்கு அவர்தம் பிறந்தநாளில் வீரவணக்கம்” என அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இதையடுத்து கவிஞர் வைரமுத்து, “பாரதியாரை தேசியத்தின் குறியீடாகவும் பாரதிதாசனை திராவிடத்தின் குறியீடாகவும் ஆதியில் அடையாளப்படுத்தியவர்கள், காலப்போக்கில் பாரதியாரை காங்கிரஸ் குறியீடாகாவும் பாரதிதாசனை தி.மு.க குறியீடாகவும் சுருக்கிவிட்டனர். காங்கிரசும் தி.மு.கவும் கூட்டணி கொண்டாடும் இந்தக் காலகட்டத்திலாவது இருபெருங் கவிஞர்களையும் மீண்டும் தேசிய திராவிடக் குறியீடுகளாக மேம்படுத்த வேண்டுகிறேன். இருவரும் கட்சி கடந்தவர்கள்; தத்துவங்களுக்குச் சொந்தமானவர்கள். பாவேந்தர் பிறந்தநாளில் இந்த இலக்கியக் கோணல் நிமிர்ந்து நேராகட்டும்” என அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Next Story

“சில வாரங்கள்; ஐந்தாண்டுகள்” - தேர்தல் குறித்து தனது ஸ்டைலில் வைரமுத்து

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
vairamuthu about election vote

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப் பதிவு நாளை (19.04.2024) தொடங்குகிறது. இதில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகள் அடங்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டதையடுத்து நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி பிரச்சாரத்தை முடித்துக் கொண்டனர். 

இதனிடையே வாக்குரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் திரைப் பிரபலங்கள் பேசி வருகின்றனர். ஏற்கனவே விஜய் சேதுபதி, “நமக்காக இல்லைன்னாலும் நம்ம குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நம்ம அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும். காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்ளோ பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது” என விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருந்தார். பின்பு விஜய் ஆண்டனியும் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பு அனைத்திலும் அனைவரும் ஓட்டு போட வேண்டும் என வலியுறுத்தி வந்தார். 

இவகளைத் தொடர்ந்து ஜெய் பீம் இயக்குநரும், “வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை” என அவரது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டு இந்தியா கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வைத்தார்.

இந்த வரிசையில் தற்போது வைரமுத்துவும், அவரது எக்ஸ் பக்கத்தில் வாக்குரிமையின் முக்கியத்தும் குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “விரலில் வைத்த கருப்புமை நகத்தைவிட்டு வெளியேறச் சில வாரங்கள் ஆகும். பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும். சரியான நெறியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள். வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.