ADVERTISEMENT

சென்னையில் நடிகை தூக்கிட்டு தற்கொலை! 

12:16 PM Sep 18, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வசித்துவந்தவர் நடிகை பவுலின் எனும் தீபா. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் தனியாக வசித்துவந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை அவரது உறவினர்கள் அவரை செல்போன் மூலம் தொடர்புகொள்ள முயற்சித்தபோது அவர் செல்போன் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் உடனடியாக அவரது நண்பரை தொடர்பு கொண்டு இந்த விஷயத்தை சொல்லி நேரில் சென்று பார்க்க சொன்னதாகவும் சொல்லப்படுகிறது.

அப்படி தீபாவின் நண்பர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருந்தது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், தீபாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும், காவல்நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் இவரது தற்கொலைக்கு காதல் விவகாரம் காரணம் என தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் வெளியான வாய்தா என்ற படத்தில் கதாநாயகியாகவும், துப்பறிவாளன் மற்றும் பல படங்களில் துணை நடிகையாகவும் பவுலின் எனும் தீபா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT