சினேகலாதா பாட்டில் என்கிற 25 வயது மாராத்தி இளம் நடிகை மாலில் மோதிரம் திருடியதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை புனே போலீஸால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இந்த இளம் நடிகை கைது செய்யப்பட்ட பின்னர் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
புனே குற்றவியல் பிரிவை சேர்ந்த டிசிபி பச்சன் சிங் இதுகுறித்து பேசுகையில், “லஷ்கர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட திருட்டு புகாரால் இவரை ஐபிசி 380ன் கீழ் கைது செய்துள்ளோம்.
இந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள திருடுபோன 50,000 மதிப்புள்ள இரண்டு மோதிரங்களுடன் இவரை கண்டுபிடித்துள்ளோம். விசாரணையில் மோதிரத்தை திருடியவர் சினேகலதா வசந்த் பாட்டில்” என்று தெரிய வந்துள்ளது.
போலீஸ் விசாரணையில் தான் ஒரு இளம் நடிகை என்று தெரிவித்ததும் போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் பின் நடைபெற்ற விசாரணையில் மூன்று படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. இந்த வழக்கை புனே இரண்டாம் யுனிட் போலீஸார் விசாரித்துள்ளனர்.