ADVERTISEMENT

மதியம் 2 முதல் 3 மணிக்குள் வேட்புமனு தாக்கல்- டிடிவி அறிவுறுத்தல்?

12:41 PM Mar 26, 2019 | kalaimohan

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் மதியம் 2 முதல் 3 மணிக்குள் வேட்புமனுத்தாக்கல் செய்யுமாறு அமமுக வேட்பாளர்களுக்கு டிடிவி தினகரன் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

குக்கர் சின்னம் கேட்டு தினகரன் வைத்த கோரிக்கை தொடர்பான விசாரணையில், நடந்த பல்வேறு வாதங்களுக்கு பிறகு தலைமை தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று தினகரனின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என உத்தரவிட்டது.

மேலும் தினகரனின் அமமுகவுக்கு பொது சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. இந்நிலையில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிய இருப்பதால் மதியம் 2 முதல் 3 மணிக்குள் வேட்புமனுத்தாக்கல் செய்யுமாறு அமமுக வேட்பாளர்களுக்கு டிடிவி தினகரன் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT