பின்னர் தனது செல்போனில் ஒவ்வொருத்தருக்கும் போன் செய்து எங்கே போயிருக்கீங்க, என்ன செய்துட்டு இருக்கீங்க என்று தனித்தனியாக கேட்டார். அதற்கு அந்த 5 பேரும், கேஸ் விஷயமா வெளியே வந்திருப்பதாக கூறியிருக்கிறார்கள்.அதற்கு எஸ்.பி. நான் உங்க ஸ்டேஷனில்தான் இருக்கேன். கொஞ்சம் வர்றீங்களா" என்று கூப்பிட்டு உள்ளார். கொஞ்ச நேரத்தில் 5 பேரும் ஸ்டேஷன் வந்துள்ளனர். இப்படி எஸ்பி திடீர் ஆய்வுக்கு வர காரணம் என்ன என்று விசாரித்தபோது , இந்த 5 பேர் பற்றியும் ஏற்கனவே இவருக்கு நிறைய புகார்கள் போய் இருக்காம். அது உண்மையான்னு கண்டுபிடிக்கவே திடீர் விசிட் அடித்துள்ளார்.
அப்போது அவர்கள் டூட்டி நேரத்தில் வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக இருப்பவர் இம்மானுவேல் ராயப்பன், எஸ்.ஐ-யாக வேலை பார்ப்பவர் அய்யப்பன். ஏட்டுகளாக இருப்பவர்கள் ராஜா, சதீஷ்குமார். ரைட்டர் விஜயராகவன். இந்த 5 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த போலீஸ் நிலையத்தின் பணிகளை கூடுதலாக கவனிக்கும்படி அருகில் உள்ள போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டருக்கு உத்தரவு விட்டு சென்றதாக கூறப்படுகிறது.