கொலை சம்பவத்தைக் கண்ட அப்பகுதி பொது மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த திருச்சி மாவட்ட எஸ்.பி. சுஜித் குமார், டி.எஸ்.பி. செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இதனிடையே, கொலை நடந்த குழுமணி பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.