Skip to main content

பழிக்கு பழி தீா்த்தோம் –இளம் கொலையாளிகள் வாக்குமூலம்

Published on 19/11/2020 | Edited on 19/11/2020
dddd

 

 

திருச்சியை எப்போதும் பரபரப்பாக வைத்திருக்கும் தொடா் கொலைகள், பழைய ரவுடிகள், கொலையாளிகளின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் புதிய ரவுடிகளும், கொலையாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அதிலும் புதிதாக உருவெடுத்துள்ள கொலையாளிகள், ரவுடிகள் 18 வயதிற்கு கீழ் உள்ளவா்கள் தான் என்பது அதிர்ச்சிக்குறிய சம்பவமாக மாறியுள்ளது.


கடந்த மே மாதம் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நரியன் தெரு பகுதியை சோ்ந்த பிரகாஷ் என்பவா் ஸ்ரீரங்கம் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை வழக்கில் அதே பகுதியை சோ்ந்த விக்னேஷ் (17), உதயா(17), கோகுல்(16), மாரி(17) என்ற இளம் கொலையாளிகளை காவல்துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா். 

 

சில மாதங்களுக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்ட விக்னேஷ், உதயா, கோகுல், மாரி உள்ளிட்டோர் பிணையில் வெளியே வந்தனா். இதில் விக்னேஷ் மட்டும் தொடா்ந்து பல குற்ற சம்பங்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை காவல்துறை குண்டாஸ் வழக்கு போட்டது. 

 

மற்ற மூன்று பேரும் அதே பகுதியில் தனக்கு எதிராக யார் இருந்தாலும் தீா்த்துகட்டுவோம் என்று பலரை மிரட்டி வந்த நிலையில், நேற்று  மாரி (17) என்பவா் தன்னுடைய செல்போனை பழுது பார்க்க திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பெரியசாமி டவரில் உள்ள செல்போன் பழுது பார்க்கும் கடைக்கு வந்தபோது திருவானை கோவில் பகுதியை சோ்ந்த சித்திக்(16) என்பவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறு, மோதலில் முடிய சித்திக் தன்னுடைய நண்பா்களுக்கு போன் செய்து அவா்களை வரவழைத்து மாரியை சரிமாறியாக கத்தியால் குத்தியுள்ளனா். 

 

இச்சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினா் மாரியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் சித்திக் மற்றும் அவனுடைய கூட்டாளிகளான கவுதம் (17), ஜீவா(16), சண்முகம்(17), சந்தோஷ(16) ஆகியோர் ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனா். அவா்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட உள்ளனா்.

 

திருச்சியில் கடந்த சில மாதங்களில் மட்டும் திருட்டு, வழிப்பறி, கொலை சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. காவல்துறை ஒருபுறம் அதனை தடுக்க பல புதிய யுக்திகளை கையாண்டாளும், பெரும்பாலான திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் காவல்துறையும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டும் வருகின்றனா். 

 

மற்றொரு புறம் காவல்துறை தொடா்ந்து ரோந்து பணிகளை அதிகரித்துள்ளது, மாற்று உடையில் காவலா்கள் ஆங்காங்கே கண்காணிப்பில் ஈடுபட்டும் வருகின்றனா். ஆனால் இந்த குற்றங்களை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே காவல்துறை விரைந்து இந்த குற்றங்களை தடுக்க புதிய யுக்திகளை கையாள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.