ADVERTISEMENT

சிறுமிக்கு பாலியல் தொல்லை; 4 காவலர்கள் கைது

05:58 PM Oct 05, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் 4 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம் மும்கொம்பு அணைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது ஆண் நண்பருடன் 17 வயது சிறுமி சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு திருவெறும்பூர் சரக தனிப்படையைச் சேர்ந்த எஸ்.ஐ. உட்பட 4 காவலர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து எஸ்.ஐ. உட்பட 4 காவலர்கள் மீது மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி 4 போலீசார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் சசிகுமார், காவலர்கள் பிரசாத், சித்தார்த், சங்கரபாண்டி உள்ளிட்ட 4 காவலர்களும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் பணியிடை நீக்கம் செய்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் ஐபிஎஸ் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT