திருச்சியில் இன்று திமுக சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் அம்பிகாபதி, தெற்கு பேரூர் தர்மலிங்கம் தலைமை வகித்தார். கூட்டத்தை துவக்கி வைத்து கே.என்.நேரு பேசியபோது,
திமுக தலைவர் ஸ்டாலின் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் தமிழகத்தை 5 மண்டலங்களாக பிரித்து நடைபெறுகிறது. இதில் முதல் கூட்டமாக திருச்சியில் நடைபெறுகிறது. இந்த கூட்டம் வருகிற ஜீன் 15ம் தேதி நடைபெறுகிறது.
இந்த கூட்டத்திற்கு திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞசாவூர், நாகை, நாகப்பட்டினம் ஆகிய பகுதியில் இருந்து தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்திற்கு முன்னதாக மாலை 4.00 மணிக்கு கலைஞர் அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலையை தலைவர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.