ADVERTISEMENT

மனமுடைந்த கூலித் தொழிலாளி காவல்நிலைய வாசலில் தற்கொலை முயற்சி..!

12:19 PM Mar 20, 2021 | tarivazhagan

ADVERTISEMENT


திருச்சி அருகே உள்ள வைர செட்டிபாளையம் என்ற கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியான செல்வராஜ் தன்னுடைய மனைவி சோலை மற்றும் இரு மகன்களும் காணவில்லை என்று உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். கடந்த 2019 டிசம்பர் மாதம் புகார் கொடுத்திருந்த நிலையில் ஒரு வருடம் ஆகியும் இதுவரை எந்தவித முன்னேற்றமும் நடவடிக்கையும் இல்லை என அதிருப்தியில் இருந்துவந்திருக்கிறார்.

ADVERTISEMENT

இதனால் மனமுடைந்த செல்வராஜ், இன்று காலை உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு வந்து, காவல் நிலைய வாசலில் தன் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தன்னைத் தானே கொலுத்தி கொண்டார். அவர் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது பணியில் இருந்த காவல்துறையினர் அவரை மீட்டு தீயை அணைத்து திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT