இருப்பினும், தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, கடந்த 2023ஆம் ஆண்டு மஞ்சுவும், சுபாஷும் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதற்கிடையே, இவர்களது காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மஞ்சுவின் தந்தை சந்திரன், தாய் சித்ரா ஆகியோர், சுபாஷின் குடும்பத்திற்கு அடிக்கடி மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன் தினம் (06-03-24) சுபாஷ், தனது தங்கையை பள்ளியில் விடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மஞ்சுவின் தந்தை சந்திரன், வேன் ஒன்றை ஓட்டி வந்து, அவர்களது இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியுள்ளார். அதன் பின்னர், வேனை அங்கே நிறுத்திவிட்டு சந்திரன் தனது மனைவியை அழைத்து தலைமறைவானார். இந்த பயங்கர விபத்தில், சுபாஷ் மற்றும் ஹாசினி பலத்த காயமடைந்தனர்.
தகவலின் பேரில், விரைந்து வந்த ஈரோடு மாவட்ட போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், தலைமறைவாக இருந்த சந்திரன் மற்றும் சித்ராவை கண்டுபிடிப்பதற்காக தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், அவர்கள் இருவரும் ஊட்டி அருகே உள்ள ஒரு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. அதன் அடிப்படையில், அங்கு விரைந்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மகளை திருமணம் செய்த மருமகனை கொலை செய்யும் முயற்சியில், மருமகனின் தங்கை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.