Skip to main content

நான் உன்னுடைய தங்கையை விரும்புகிறேன்... கணவனுக்கு மனைவி கொடுத்த பரிசு... அதிர்ச்சி தகவல்!

Published on 10/12/2019 | Edited on 11/12/2019

மனைவியிடம் நான் உன்னுடைய தங்கையை விரும்புகிறேன் என்று கூறிய கணவனுக்கு விரும்பிய பெண்ணை மனைவியே திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில், பிந்த் என்ற மாவட்டம் உள்ளது. அங்கு நடந்த ஒரு திருமண விழாவில் இரு பெண்களை ஒரே மணமகன் திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் பிந்த் மாவட்டத்தில் வசிப்பவர் திலீப். இவருடைய மனைவி வினிதா. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பே திலீப் என்பவர் வினிதா என்ற பெண்ணை திருமணம் செய்து இருக்கின்றார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில், திலீப் வினிதாவின் உறவினர் பெண்ணான ரக்ஷனா என்ற பெண்ணை விரும்பியதாக சொல்லப்படுகிறது. இதை தனது மனைவியிடம் திலீப் கூறியுள்ளார். இதற்கு திலீப்பின் மனைவி சம்மதம் தெரிவித்து திருமண ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். 

 

incident



இதனையடுத்து ரக்ஷனாவிற்கு மாலை மாற்றி திருமணம் செய்தது மட்டுமில்லாமல் முதல் மனைவி வினிதாவிற்கும் தங்களுடைய குழந்தைகள் முன்பே மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டு இருக்கின்றார் திலீப்.  இந்த திருமணம் பற்றி திலீப்பின் முதல் மனைவி வினிதா கூறிய போது, "எனக்கு சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் என்னுடைய மூன்று குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள முடியவில்லை. அதோடு என்னுடைய கணவனையும் கவனிக்க முடியவில்லை. அதனால் தான் என் தங்கையை எனது கணவருக்கு திருமணம் செய்ய சம்மதித்தேன்." என்று கூறியுள்ளார். மேலும் வேறு பெண்ணை திருமணம் செய்து வைத்திருந்தால் எனது குழந்தைகளை சரியாக கவனிக்க மாட்டார்கள். எனது தங்கை என்றால் எனது குழந்தையை அவள் குழந்தை போல் நினைத்து கவனித்து கொள்வாள். மேலும் குடும்பத்திலும் எந்த பிரச்னையும் வராது என்றும் கூறியுள்ளார். அதோடு எனது கணவருக்கும் அவளை பிடித்து போனதால் திருமணத்திற்கு சம்மதம் உடனே தெரிவித்து விட்டேன் என்று கூறியுள்ளார். 


மேலும் இந்த சம்பவம் குறித்து திலீப் கூறும் போது, நீண்ட காலமாக ரக்ஷனாவை நான் விரும்பி வந்தேன். அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக என்னுடைய மனைவியிடம் நான் தெரிவித்தேன். அவரும் அதற்கு சம்மதித்தார் என்று கூறியுள்ளார். அக்கா மற்றும் தங்கையை ஒருவரே திருமணம் செய்துள்ள சம்பவம் பிந்த் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.