ADVERTISEMENT
2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு பணிக்கு வந்த புதிய தொழிலாளர்களுக்கும் பென்ஷன் வழங்க வேண்டும்; ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் டி.ஏ. மற்றும் பணப் பலன்களை உடனே வழங்க வேண்டும்; 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே பேசி முடிவு செய்ய வேண்டும்; மேலும் கான்ட்ராக்ட் அடிப்படையில் தொழிலாளர்களை நியமனம் செய்யக்கூடாது; போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழகத்தில் செயல்படும் தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வூதியர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் பல்லவன் இல்லத்தில் ஊர்வலமாகச் சென்று மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநரிடம் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கும் பேரணி நடத்தினர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments