உலக புற்றுநோய் தினமான நேற்று (04.02.2021) சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை சார்பாகவும், மறைந்த புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவர் சாந்தா நினைவாகவும் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ‘புற்றுநோய் ஒரு மரண சாசனம் அல்ல’, ‘வெல்வோம் புற்றுநோயை’ எனும் பதாகைகளுடன் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டனர்.