Skip to main content

கழிப்பறை வசதியில்லாத மலைகிராமங்கள்...  தூய்மை இந்தியா திட்டம் நூறு சதவிகிதம் தோல்வி!

Published on 20/11/2019 | Edited on 20/11/2019

 

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம், மலைகிராமமான மணலூர் ஊராட்சியில் பெரும்பாறை, புல்லாவெளி, புங்கப்பட்டி, பெரும்பாறைபுதூர் காலனி, மஞ்சள்பரப்பு உட்பட பல கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் தூய்மை இந்தியா திட்டம் மூலம் தனிநபர் கழிப்பறைகள் முறையாக கட்டிக் கொடுக்கப்பட்டன. குறிப்பாக புல்லாவெளி மற்றும் பெரும்பாறைபுதூர் காலனி பகுதியில் தனிநபர் கழிப்பறைகள் இன்றுவரை கட்டிக் கொடுக்கப்படவில்லை.

இன்றுவரை அப்பகுதி மக்கள் தாண்டிக்குடி செல்லும் சாலையை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். மழை வந்தால் மலம் கலந்த கழிவுநீர் தங்கள் வாசல் பகுதிக்கு வந்து தங்களுக்கு தொற்றுநோயை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர். இதுதவிர தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தனிநபர் கழிப்பறைகள் என்னாச்சு என கேள்வி எழுப்புகின்றனர்.  இதுதவிர புல்லாவெளி, கொங்கபட்டி பகுதிகளில் கட்டப்பட்டுள்ள மகளிர் சுகாதார வளாகம் திறக்கப்படாமல் இருப்பதால் மலைகிராம பெண்கள்  கடும் அவதிப்படுகின்றனர்.

மஞ்சள்பரப்பில் கடந்த கஜா புயலின்போது சேதமடைந்த பயணியர் நிழற்குடையை இன்றுவரை சீரமைக்காமல் இருப்பதால் பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயத்தில் உள்ளனர். பெரும்பாறையை அடுத்த புதூர் பகுதிக்கு செல்ல முடியாத அளவிற்கு சாலையின் இரு ஓரங்களிலும் மலம் கலந்த கழிவுகள் இருப்பதால் அப்பகுதியில் செல்வோர் நடமாட முடியாமல் இருசக்கர வாகனத்திலும், வேன்கள் மூலம்தான் அப்பகுதியை கடக்கின்றனர். இதனால் புதூர் பகுதியில் வசிக்கும் மலைவாழ்மக்கள் தொற்று நோய்களுக்கு ஆளாகி  சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்குள்ள மயானத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்ய முடியாத அளவிற்கு புதர்மண்டி கிடக்கிறது. கிராமங்களில் வைக்க வேண்டிய இரும்பு குப்பைத் தொட்டிகள் ஒட்டுமொத்தமாக பெரும்பாறை மருத்துவமனை முன்பு வைத்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் குப்பைக் கழிவுகளால் கொசுக்கள் உற்பத்தியாகி சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை மேலும் பல நோய்களை உருவாக்கி வருகிறது. தெருவிளக்கு வசதி, வடிகால் வசதி இல்லாமல் அவதிப்படும் மணலூர் ஊராட்சி மலைவாழ் மக்கள் தங்களுக்கு கழிப்பறை வசதி வேண்டும் என கடந்த மூன்று வருடங்களாக போராடியும் தங்கள் பகுதிக்கு ஒரு கழிப்பறை கூட கட்டிக் கொடுக்கவில்லை என புகார் செய்கின்றனர். தூய்மை இந்தியா திட்டம், திறந்தவெளியில் மலம் கழித்தலை ஒழித்தல் திட்டம் என பல்வேறு திட்டங்கள் போட்டாலும் மலைவாழ் மக்களுக்கு ஒரு திட்டம் கூட போய் சேருவதில்லை.

ஊராட்சி நிர்வாகம் முறையாக செயல்படாததால் மலைகிராம மக்கள் கடும் வேதனையிலும், தொற்றுநோய் பாதிப்பிலும் கண்ணீர் விடுகின்றனர். மாவட்ட திட்ட இயக்குநர் ஒரு முறையாவது தாங்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து தனிநபர் கழிப்பறை இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும்,அப்போது தான் நாங்கள் படும் கஷ்டம் தெரியும் என கூறுகின்றனர். மேலும் தரைப்பகுதி கிராமங்களில் கூட்டுக் கழிப்பறைகள் கட்டி பொது சுகாதாரம் காக்கும் மாவட்ட நிர்வாகம் தங்கள் பகுதியிலும் கூட்டுக்கழிப்பறைகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் இந்த விசயத்தில் தனி கவனம் செலுத்தி ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மணலூர் ஊராட்சியில் உள்ள புல்லாவெளி, கொங்கபட்டி, பெரும்பாறைபுதூர் பகுதியில் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட 250 கழிப்பறைகள் என்னாச்சு? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். மத்திய அரசு எத்தனை தூய்மை இந்தியாதிட்டங்கள் கொண்டு வந்தாலும் ஆத்தூர் ஒன்றியத்தில் மட்டும் படுதோல்வி அடைந்து வருவது வேதனை அளிக்கிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.