ADVERTISEMENT

தமிழகத்தின் இன்றைய கரோனா நிலவரம்

08:51 PM Feb 09, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 3,971 ஆக பதிவாகியுள்ளது. நேற்று 4,519 ஆக பாதிப்பு பதிவான நிலையில் இன்றைய ஒருநாள் பாதிப்பு குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,10,494 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

சென்னையில் மட்டும் இன்று 742 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 792 ஆக இருந்த நிலையில், இன்று குறைந்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 37,837 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 16 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 12 பேரும் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது வரை 77,607 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் 16,473 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 32,09,032 பேர் மொத்தமாகக் குணமடைந்துள்ளனர். கோவையில்-726, செங்கல்பட்டு-334 பேருக்கு கரோனா இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT