கோடைகாலத்தின் உச்சக்கட்டமாக கருதப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது.
ADVERTISEMENT
தமிழகத்தில் கோடைக்கு முன்பே சுட்டெரிக்கும் வெயில் ஏப்ரல் மாதத்திலேயே ஆரம்பித்து பலமாவட்டங்களில் 100 டிகிரியை தொட்டது. அப்படியிருக்க உச்சக்கட்ட தாக்கமாக கருதப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது.
ADVERTISEMENT
இந்த கத்தரி வெயிலால் வெப்பநிலை இன்னும் பலமடங்கு அதிகரிக்கும் எனவே பொதுமக்கள் அதிகம் வெளியே செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக சில மாவட்டங்களில் மழைக்கும் வாய்ப்புண்டு எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த கத்தரி வெயிலானது வரும் 28-ஆம் தேதிவரை நீடிக்கும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
ADVERTISEMENT
Show comments