அதன்படி 2018- ஆம் ஆண்டு அக்டோபர் 9- ஆம் தேதி முதல் 15- ஆம் தேதி வரை முதன்மைத் தேர்வுகள் நடைபெற்றன. பின்னர், இதில் வெற்றி பெற்ற 2288 பேருக்கு 2019- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11 மற்றும் 12- ஆம் தேதிகளில் உடற்தகுதி தேர்வு நடைபெற்றது. 2019- ஆம் ஆண்டு ஜூலை 16- ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் நேர்முகத்தேர்வு நடைபெற்றன.
இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவி, உடல் தகுதித் தேர்வில் தோல்வியடைந்த நபர்களைக் கொண்டு 152 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக உடற்தகுதியற்ற 8 பேர் நேர்காணலுக்கு வந்திருந்ததைக் குறிப்பிட்டு வழக்கு தொடர்ந்து, அவர்கள் உடற்தகுதியற்றவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டால், மீதமுள்ள பணி ஆணை பெற்ற அனைத்து நபர்களையும் மறு உடற்தகுதி தேர்வுக்கு உட்படுத்தவேண்டும் என்று வாதிட்டார்.
எனவே முறைகேடுகள் நடந்திருப்பது உறுதியாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களைத் தகுதி நீக்கம் செய்து மீதமுள்ள அனைவருக்கும் மறு உடற்தகுதித் தேர்வு நடத்தப்பட்டு, தகுதியானவர்களை பணியில் அமர்த்துவதற்கு, வரும் மார்ச் 5- ஆம் தேதி வழக்கின் தீர்ப்பாணை வழங்கப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.