ADVERTISEMENT

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடக்கம் 

08:40 AM Feb 05, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு வரும் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறும் இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி, நேற்று மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இதையடுத்து, தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்குகிறது.

வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு வரும் பிப்ரவரி 7ஆம் தேதி கடைசி நாளாகும். இறுதிகட்ட வேட்பாளர் பட்டியல் பிப்ரவரி 8ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22ஆம் தேதி எண்ணப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT