ADVERTISEMENT
ADVERTISEMENT
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,932 சிறப்புப் பேருந்துகள் இயக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக சிறப்புப் பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அதில், ஜனவரி 12,13,14 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் 16,932 சிறப்புப் பேருந்துகள் இயக்க முடிவு செய்துள்ளதாகவும், சென்னையில் 5 மையங்களில் இருந்து சுமார் 10,749 பேருந்துகள் இயக்கப்பட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கூட்டம் முடிந்த பிறகு இதுகுறித்த முழுமையான அறிவிப்பு வெளியாகும் எனச் சொல்லப்பட்டுள்ளது.
Show comments