Skip to main content

கருணை அடிப்படையில் 49 பேருக்கு பணி நியமன ஆணை!

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

Appointment order for 49 people on compassionate basis in Chidambaram

 

சிதம்பரம் கிளை விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வு அறை திறப்பு விழா, பணிக்காலத்தில் இறந்த ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 49 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை வழங்கும் விழா மற்றும் 14 பேருக்கு காலமுறை பதவி உயர்வு ஆணை வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 

கடலூர் மாவட்ட ஆட்சியர் அ.அருண்தம்புராஜ் தலைமை வகித்தார். விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ்மோகன் வரவேற்றார். தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் ச.சி.சிவசங்கர், தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வு அறையை திறந்து பயனாளிகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கிப் பேசினர்.

 

விழாவில் அமைச்சர் ச.சி.சிவசங்கர் பேசுகையில், “கடந்த மாதத்தில் நூறு பேருந்துகளை சீரமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழக முதல்வராக அவர் பொறுப்பேற்று பின்பு புதிய வடிவில் புணரமைக்கப்பட்டு வருகிறது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்து, இன்று மீண்டும் சீரான நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது. அதற்கான தொகையை தமிழக முதல்வர் வழங்குகிறார். கடந்த ஆண்டில் ரூ.1500 கோடியும், இந்த ஆண்டில் 2500 கோடியும் தொகை வழங்கப்படுகின்ற காரணத்தினால் நமது தொழிலாளர்களுக்கான, மாத ஊதியத்தை முதல் தேதியில் வழங்கும் நிலை ஏற்பட்டது. பக்கத்து மாநிலங்களில் 15 நாட்கள் மற்றும் 30 நாட்கள் கழித்து ஊதியம் பெறும் நிலை உள்ளது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல், இருக்கின்ற நஷ்ட நிலைமையில் அதையெல்லாம் சரி செய்து முதல்வர் போக்குவரத்து துறையை காத்து கொண்டிருக்கிறார். 

 

அதே போல் புதிய 2000 பேருந்துகள் வாங்குவதற்கான நிதியை ஒதுக்கி அதற்கான டெண்டர் விடப்பட்டு, இறுதி கட்டத்தில் உள்ளது. இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் புதிய பேருந்துகள் வரவுள்ளது. ஓட்டுநர், நடத்துநர்களின் மனக்குறை, பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், பணிச்சுமை அதிகமாக உள்ளது என்ற குறையை போக்கும் வகையில் புதிய ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணி அமர்த்துவற்கான ஆணை வழங்கி அரசு போக்குவரத்து கழகத்தில் முதல் கட்டமாக 685 பேர் நியமிப்பதற்கான ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்பட்டு, 11200 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். விண்ணப்பித்தவர்கள் தேர்வு பெற்று பிறகு மருத்துவம், உடல் தேர்வு சரி பார்த்த பிறகு பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது. போக்குவரத்துக்கழக பேருந்துகளை மீண்டும் சீரமைக்கும் பணிக்கு தமிழக முதல்வர் நிதி ஒதுக்கி காத்து வருகிறார். அதே போல் பணிக்காலத்தில் இறந்து போன ஊழியர்களின் வாரிசு தாரர்களுக்கு சென்னையில் முதல்வரால் முதல் கட்டமாக பணி ஆணை வழங்கப்பட்டது. 

 

தற்போது இரண்டாவது கட்டமாக  இங்கு விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில்  49 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இன்று மூன்று போக்குவரத்து கழகங்களில் அதே போன்று பணி ஆணை வழங்கப்படவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நடைபெறாமல் உள்ள பணிகள் எல்லாம், தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். பணியில் இருந்து ஓய்வுபெறும் அன்றைக்கே பணப்பலன்களை வழங்க அதற்கான ரூ.1500 கோடி நிதியை வழங்கி, பணப்பலன்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தள்ளாட்டத்தில் இருந்த போக்குவரத்து கழகத்தை முதல்வர் சரி செய்து கொடுத்துள்ளார். கடந்த ஆட்சி காலத்தில் ஊதிய பேச்சுவார்த்தை பல முறை பேசப்பட்டு நிறைவேற்றப்படாமல் மூன்று ஆண்டுகள் முடிந்து இழுத்தடிக்கப்பட்டு, திமுக ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. இளையவர், மூத்தவர் என்ற வித்தியாசம் இல்லாமல் வழங்கப்பட்ட ஊதிய நிலையை மாற்றி, மீண்டும் கலைஞர் ஆட்சி காலத்தில் நடந்தது போன்று மீண்டும் பே மெட்ரிக்ஸ் (pay Matrics) முறையில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வர் ஏற்றுக்கொண்டு கூடுதல் நிதியை ஒதுக்கி பழைய முறையில் ஊதியம் வழங்கப்படுகிறது” என்றார்.

 

விழாவில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், “10 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற மறைந்த முதல்வர் கலைஞர் ஆட்சியில் தான் விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக மண்டலத்திலிருந்து கடலூர் தனி மண்டலமாக பிரிக்கப்பட்டது. தற்போது வருமானத்தை ஈட்டித்தருவதில் முதல் மண்டலமாக கடலூர் மண்டலம் திகழ்கிறது. தொழிலாளர்கள் விபத்துகள் ஏற்படுத்தாமல் பணியாற்ற வேண்டும். அதற்காகத்தான் அரசு பணிமனைகளில் குளிரூட்ட ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 21 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் துறையாக போக்குவரத்து துறை செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வைத்து போராட்டம் நடத்தி வந்த நிலை மாறி, தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழிலாளர்கள் கோரிக்கை வைக்காமலேயே, அவர்களது தேவைகளை நிறைவேற்றி வருகிறார்” என்றார்.

 

விழாவில் தொழிற்சங்கத் தலைவர் தங்க.ஆனந்தன், விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினார். கடலூர் கோட்ட பொதுமேலாளர் எஸ்.ராஜா நன்றி கூறினார்.  விழாவில் கிளை மேலாளர்கள் எஸ்.கிருஷணமூர்த்தி, வி.மணிவேல், உதவிப் பொறியாளர் ஆர்.பரிமளம், துணை மேலாளர் ரகுராமன், உதவி மேலாளர் சிவராமன், கடலூர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் த.ஜேம்ஸ்விஜயராகவன், நகரமன்ற உறுப்பினர்கள் அப்புசந்திரசேகர், ஏஆர்சி மணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர் கோமதி சேகர், புவனகிரி ஒன்றிய திமுக செயலாளர் மனோகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''அதற்காக என்ன பாஜகவினரைச் சுட்டா வீழ்த்த முடியும்''-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
 'Who will go missing will be known after June 4'-Edappadi Palaniswami speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரியலூரில் நடைபெற்று வரும் பிரச்சாரக் கூட்டத்தில் சிதம்பரம் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில், ''எங்களை மிரட்டி பார்க்கும் வேலையெல்லாம் வேண்டாம். அதிமுக என்ற கட்சி அதிக தொண்டர்களைக் கொண்டது. அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போய் உள்ளனர். எங்களைச் சீண்டி பார்க்காதீர்கள். அப்படி பார்த்தால் எப்படி இருக்கும் என அதிமுக தொண்டர்கள் காட்டுவார்கள்.

வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகி விட்டதால் சிலர் எதை எதையோ உளறிக் கொண்டிருக்கிறார்கள். பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அதிமுக என்றைக்கும் பயப்படாது. அதிமுகவை அழிக்க நினைத்த சிலர் தற்போது பழத்தை தூக்கிக் கொண்டு அலைகின்றனர்.  உண்மையில் யார் காணாமல் போவார்கள் என்பது ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு தெரியவரும். அண்மையில் பார்த்தால் திமுக அயலக அணி துணை அமைப்பாளர் என்ற திமுக நிர்வாகி இரண்டு ஆண்டு காலமாக வெளிநாட்டுக்கு போதைப் பொருளை கடத்தி கொண்டிருக்கிறார். நீங்களே பாருங்கள்'' என முதல்வருடன் ஜாபர் சாதிக் எடுத்த புகைப்படத்தைக் காட்டினார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் உடன் ஜாபர் சாதிக் இருக்கும் புகைப்படத்தையும் காட்டினார்.

பின்னர் மீண்டும் பேச தொடங்கிய எடப்பாடி, ''முதலமைச்சரோடு நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளார். பின்னர் விளையாட்டுதுறை அமைச்சருடன் நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளார். போட்டோ எடுத்துக் கொள்ளட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை. நான் வரும்போது கூட நிறைய போட்டோ எடுத்தாங்க. ஆனால் அவருடைய கட்சி நிர்வாகி, பொறுப்பில் உள்ள நிர்வாகி போட்டோ எடுத்துள்ளார். தனிப்பட்ட முறையில் புகைப்படம் எடுத்துள்ளார்கள். இதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் கடத்திய ஆசாமிக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு என மக்கள் கேட்கிறார்கள். மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை முதல்வருக்கும் விளையாட்டுதுறை அமைச்சருக்கும் இருக்கிறது.

ஆறு மாதத்திற்கு முன்பு திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் 'நான் இரவில் படுத்து தூங்கி காலையில் கண்விழித்து பார்க்கும் பொழுது என்னுடைய கட்சிக்காரர்களால் என்ன பிரச்சனை வந்து விடுமோ என்ற அச்சத்தில் கண் விழிக்கிறேன்' என்கிறார். இதை நான் சொல்லவில்லை திமுக தலைவர் சொல்கிறார். அப்படி என்றால் அந்தக் கட்சியினர் எப்படி அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதை அவரே சொல்லிவிட்டார். நாம் சொன்னால் கூட வேண்டுமென்று எதிர்க்கட்சி குற்றம் சுமத்துகிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால் திமுக தலைவரே அவருடைய கட்சிக்காரர்களைப் பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளார். மக்களுக்கு எதிரான திட்டங்களை பாஜக கொண்டுவந்தால் அதை எதிர்க்கும் திறன் அதிமுகவிற்கே உள்ளது. ஆனால் அதேநேரம் நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தால் பாராட்டவும் செய்வோம். எதிர்க்கும் போது எதிர்ப்போம்; பாராட்டும் போது பாராட்டுவோம் என்பதே அதிமுகவின் ஸ்டைல். கூட்டணியை நம்பி அதிமுக தேர்தலைச் சந்திக்கவில்லை. மக்களை நம்பியே இந்தத் தேர்தலைச் சந்திக்கிறோம். கூட்டணியிலிருந்த வரை பாஜகவிற்கு விசுவாசமாக இருந்தோம். தற்பொழுது விலகி விட்டோம். பாஜகவை எதிர்க்கவில்லை என்கின்றனர், அதற்காக என்ன பாஜகவினரைச் சுட்டா வீழ்த்த முடியும்'' என்றார்.

 

Next Story

'பானை சின்னத்தை வாங்கியதால் பாதி வெற்றி பெற்றுள்ளோம்' உதயநிதி ஸ்டாலின் சிதம்பரத்தில் பேச்சு

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
Having bought the pot symbol, we have won half of it' Udhayanidhi Stalin's speech in Chidambaram

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடுகிறார். இவருக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் வேன் மூலம் சிதம்பரம் தெற்கு வீதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''நாடாளுமன்றத் தேர்தலுக்கு இதுவரை 15 தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். இது பிரச்சாரம் கூட்டம் போல் தெரியவில்லை. வெற்றி விழா போல் உள்ளது.

இங்கே வரும்போது ஒரு நல்ல செய்தியோட வந்துள்ளேன் 30ந்தேதி மாலை பானை சின்னம் விசிகவுக்கு உறுதியாகிவிட்டது.  ஒன்றிய பாஜக அரசு அவர்களுடன் கூட்டு வைத்துள்ள அனைத்து கட்சிகளுக்கும் என்ன சின்ன வேண்டுமானாலும் கொடுத்துள்ளார்கள்.  இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் கேட்கும் சின்னத்தை கொடுக்க முடியாது என்கிறனர். இதற்கு விடுதலை சிறுத்தை கட்சியின் தோழர்கள், வழக்கறிஞர்கள் வெற்றிகரமாக நீதிமன்றத்தில் வாதாடி பானை சின்னத்தை பெற்றுள்ளார்கள். பானை சின்னத்தை வாங்கியதால் பாதி வெற்றி பெற்றுள்ளோம்''என்றார்.

'வாக்களிக்க அனைவரும் முடிவெடுத்து விட்டீர்களா?'என  பொதுமக்களை பார்த்து கேட்க அனைவரும் 'முடிவெடுத்து விட்டோம்' என சத்தமாக கூறினார்கள். உங்களுக்கு  ஏப்ரல் 19ஆம் தேதி வாக்களிக்கும் போது பானை சின்னம் தான் தெரியும் தெரிய வேண்டும். அதில் நீங்க அழுத்துற பொத்தான் மோடிக்கு வைக்கும் வேட்டாக இருக்க வேண்டும். கடந்த முறை திருமாவளவன் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  இந்த முறை 3 லட்சத்திற்கும் குறையாமல் அவர் வெற்றி பெற வேண்டும். ஏனென்றால் பானை சின்னம் அவரை தர மறுத்ததால் இந்த செய்தி இந்திய அளவில் பரவியுள்ளது. இது எப்படி வாங்கினார்கள் என்ற விவாதம் தொலைக்காட்சிகளில் வைரல் ஆகி வருகிறது. இந்த விளம்பரமே போதும் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.

சிதம்பரத்தில் புதிய பேருந்து நிலையம் 15 கோடியில், தேரோடும் வீதியில் 10 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் நடைபாதை அமைக்கப்படுகிறது, பெரியண்ணா குளம், ஞானபிரகாச குளம் சீரமைக்கப்பட்டுள்ளது. ரூ 143 கோடி செலவில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ47 கோடியில் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இது திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2.5 ஆண்டு கால ஆட்சியில் செய்யப்பட்டுள்ளது. 42 கோடிக்கு திட்ட மதிப்பீடுகள் அனுப்பப்பட்டுள்ளது. சாதனைகள் சிதம்பரம் நகரத்தில் முக்கிய இடங்களில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் ரூ 23 கோடியில் விரைந்து நடைபெற உள்ளது. இதுவெல்லாம் நாம் செய்த சாதனைகள்.  

Having bought the pot symbol, we have won half of it' Udhayanidhi Stalin's speech in Chidambaram

திருமாவளவனை எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் டெபாசிட்டை இழக்க செய்ய வேண்டும். இவரை சில அரசியல் புரோக்கர்கள் திமுக கூட்டணியில் இருக்க மாட்டார்கள் என கூறினார்கள் அவர் இது தான் கொள்கை கூட்டணி என உறுதியோடு இருந்தார். பாஜக கூட்டணி தான் கொள்ளை கூட்டணி.  நான் மிகப்பெரிய வெற்றியாக கருதுவது அண்ணன் திருமாவளவன் மற்றும் விழுப்புரத்தில் ரவிக்குமார் வெற்றியை தான்.  

மகளிர் தான் அரசு பேருந்துகளின் உரிமையாளர்கள் அவர்கள் எங்க நிறுத்தினாலும் நிறுத்தி ஏறி கொள்கிறார்கள் 3 வருடத்தில் 450 கோடி பயணங்கள் மேற்கொண்டுள்ளனர். ரோஸ் கலர் பேருந்துகளை அவர்கள் ஸ்டாலின் பேருந்து என கூறுகிறார்கள். கட்டணம் இல்லா பேருந்து அது உங்களின் உரிமை.பெண்கள் பள்ளிக்கு மட்டும் போகாமல் கல்லூரிக்கு போய் பட்டங்களை பெற வேண்டும். அதற்காக புதுமைப்பெண் திட்டத்தை உருவாக்கி மாதம் ரூ 1000 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கலைஞர் மகளிர் உரிமைச் திட்டம் மூலம் 1 கோடியே 16 லட்சம் மகளிர் உரிமைத்தொகை பெறுகிறார்கள். மீதி விண்ணப்பித்தவர்களுக்கும் வழங்கப்படும். அந்தத் துறைக்கும் நான்தான் அமைச்சர் உறுதி அளிக்கிறேன். ஆனால் நீங்க எனக்கு ஒரு வாக்குறுதி அளிக்க வேண்டும் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள 5  ஓட்டுகளும் கண்டிப்பாக பானை சின்னத்திற்கு கிடைக்க நான் உறுதி ஏற்றுக் கொள்கிறேன் என உறுதி அளிக்க வேண்டும்.

நான் பிரச்சாரம் மேற்கொண்டது ஒரு ட்ரெய்லர் தான் ஆனால் வரும் 6 ஆம் தேதி  இங்கு தமிழக முதல்வர் பிரச்சாரம் மேற்கொண்டு  பாசிச மோடி அரசு பற்றியும் கழக ஆட்சி என்னென்ன திட்டங்களை கொண்டுள்ளது என்பது பற்றி பேசுவார்'' என்றார்.