ADVERTISEMENT

இறுதி ஊர்வலத்தில் விழுந்த இடி; உடலை தூக்கி சென்றவர் உயிரிழப்பு

05:41 PM Nov 03, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மதுரையில் இறுதி ஊர்வலத்தின் போது மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை மாவட்டம் கீரனூரில் இறுதிச் சடங்கு ஊர்வலம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் இறந்தவர் உடலைத் தூக்கிச் சென்று இளையராஜா (35) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மின்னல் தாக்கியதில் பலத்த காயமடைந்த அனைவரும் மதுரை மற்றும் திருப்புவனம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறுதி ஊர்வலத்தில் இடி விழுந்து ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயமடைந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT