ADVERTISEMENT

மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த மூன்று பேர் உயிரிழப்பு

07:18 AM May 14, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்திய மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் பலர் கள்ளச்சாராயம் அருந்தியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் 16 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய மூன்று பேரும் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முண்டியம்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் மீதமுள்ள 13 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த அமரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் ஏற்கனவே அதிகமாக கள்ளச்சாராய புழக்கம் இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், அமரன் என்பவருக்கு எங்கிருந்து கள்ளச்சாராயம் கிடைத்தது. தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஸ்பிரிப்ட் கலவையை வைத்து இந்த கள்ளச்சாராயம் உருவாக்கப்பட்டதா என்பது தொடர்பாக போலீசார் அமரனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளச்சாராயம் அருந்தி 3 பேர் உயிரிழந்த சம்பவம் மரக்காணத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT