ADVERTISEMENT

பிரபல வழிப்பறி கொள்ளையன் கபாலி மீது மூன்றாவது முறையாக பாய்ந்தது குண்டாஸ்!

09:26 PM Sep 22, 2018 | elayaraja


சேலத்தில் பிரபல வழிப்பறி கொள்ளையனான கபாலி என்கிற சுப்ரமணியை மூன்றாவது முறையாக போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

ADVERTISEMENT


சேலம் சீலநாயக்கன்பட்டி ஊத்துக்காடு பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் கபாலி என்கிற சுப்ரமணி (26). கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி, ஊத்துக்காடு பகுதியைச் சேர்ந்த தங்கமணி என்பவர் சீலநாயக்கன்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

அவரிடம் இருந்த ரூ.1050 மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை கத்தி முனையில் பறித்துக்கொண்டு தப்பியோட முயற்சித்தார். அப்போது அங்கிருந்த சிலர் அவரை பிடிக்க முயன்றபோது அவர்களையும் கத்தியைக் காட்டி கொன்று விடுவதாக மிரட்டியபடி, தப்பிச்சென்றார். தங்கமணியின் தம்பியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கபாலி கொலை செய்துவிட்டார். அந்த வழக்கில் தனக்கு எதிராக சாட்சி சொல்லக்கூடாது என்றும் தங்கமணியை அவர் மிரட்டியுள்ளார்.


இதுகுறித்து அப்போது வழக்குப்பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார் அவரை கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில், தற்போது அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் செவ்வாய்பேட்டை பகுதியில் நடந்து சென்ற பெண் ஒருவரிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு, ஜூன் மாதம் கொண்டலாம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு ஆகிய குற்ற வழக்குகளும் கபாலி மீது விசாரணையில் உள்ளது.


தொடர்ந்து சமூகத்தை அச்சுறுத்தும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த கபாலி என்கிற சுப்ரமணியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர், சேலம் மாநகர துணை கமிஷனர் தங்கதுரை ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கரிடம் பரிந்துரை செய்தனர். அவருடைய உத்தரவின்பேரில், இன்று கபாலியை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். ஏற்கனவே அவர் இரண்டு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT