ADVERTISEMENT

புழல் ஏரி இன்று மாலை திறக்கப்படுகிறது!!!

12:32 PM Dec 04, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

'புழல் ஏரி இன்று மாலை திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரியில் இருந்து இன்று (04/12/2020) மாலை 03.00 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. முதற்கட்டமாக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு பின்னர் அதிகரிக்கப்படும். புழல் ஏரி தண்ணீர் செல்லும் பாதையில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. புழல் ஏரி கரையோரம், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், நாரவாரிக்குப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

தொடர் கனமழை காரணமாக, 21 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் தற்போது 20 அடிக்கு நீர் உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 824 கனஅடியாக இருக்கிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT