Skip to main content

திருவள்ளூருக்கு திடீர் பயணம் மேற்கொண்ட ஓ.பி.எஸ்..!

Published on 03/10/2020 | Edited on 03/10/2020

 

OPS makes a sudden trip to Tiruvallur ..!

 

 

அதிமுகவில் நடந்து முடிந்த பொதுக்குழுக்கு பின் அதிமுக வட்டாரத்தில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து முதல்வர் வேட்பாளர் யார்? என்ற போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அக்டோபர் 1ஆம் தேதி சிறுவாபுரி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்..?  என்ற போட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ளது. இதனால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் அண்மையில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தின்போது ஓ.பி.எஸ். ஆதரவாக ஒரு தரப்பினரும், ஈ.பி.எஸ். ஆதரவாக மற்றொரு தரப்பினரும் முழக்கங்கள் எழுப்பியதால் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் நடைபெற்ற பொதுக்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்து அக்டோபர் 7ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

 

இந்த நிலையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திடீர் என்று  திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சிறுவாபுரியிலுள்ள முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவிலிலும் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு வழிபாடு செய்தார். பௌர்ணமி நாளில் முருகப் பெருமானையும், பெரியபாளையம் பவானி அம்மனையும் வேண்டி வழிபாடு நடத்தினால் நினைத்த காரியம் கை கூடும் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆஸ்தான ஜோதிடர் அளித்த ஆலோசனைப்படியே பௌர்ணமி சிறப்பு பூஜையை அவர் செய்ததாக கூறப்படுகிறது.

 

மேலும் பல ஆண்டுகளாக தமிழகத்தின் பெரும்பான்மையான அரசியல் கட்சி தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது தமிழகத்தின் ஈசானி மூலையான திருவள்ளூர் மாவட்டம், கவரபேட்டை அருகேயுள்ள அரியதுறை சிவன் கோவிலில் பூஜை செய்துவிட்டுதான் காரியத்தை தொடங்குவார்கள். ஜெயலலிதா, விஜயகாந்த் போன்றோர் இங்கு வழிபட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விசாரணைக் கைதி மரணம்; எடப்பாடி பழனிசாமி கண்டனம்!  

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiruvallur incident Edappadi Palaniswami condemned

விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள  எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகவும், பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இதுவரை அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் மட்டும் பார்த்துவிட்டு தன் மனம் அதிர்ந்து போனதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனம். பொதுமக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே நடந்துகொள்ள வேண்டுமென காவல்துறையினரையும், அதற்கான உரிய உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்குமாறு முதல்வரையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

பாஜக மாநில நிர்வாகி வீட்டில் பறக்கும்படை சோதனை

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Air force raids BJP state executive's house


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. அதேநேரம் தேர்தல் பறக்கும் படை பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பாஜக மாநில நிர்வாகி ஒருவர் வீட்டில் பறக்கும் படை திடீர் சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக ஓபிசி அணி மாநிலச் செயலாளர் கே.ஆர்.வெங்கடேசன் என்பவர் வீட்டில் பறக்கும் படையானது சோதனை நடத்தி வருகிறது. திருவள்ளூரில் பாஜக சார்பில் பணம் பட்டுவாடா செய்வதற்காக நிர்வாகி வீட்டில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து,  பாடிய நல்லூரில் உள்ள வெங்கடேஷ் வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.