ADVERTISEMENT
உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி போலீஸ் பாதுகாப்பு கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
ADVERTISEMENT
திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன், சிதம்பரம் மக்களவை தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர், கடந்த 2016ம் ஆண்டு முதலே தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்றும், தனக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும், தேர்தல் பரப்புரை இருப்பதால் நிரந்தரமாக போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
திருமாவளவன் தாக்கல் செய்துள்ள இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது.
Show comments