அந்தக் காவல்துறை அதிகாரி அப்படி பேசியதன் பின்னணி இது -
ஸ்ரீவில்லிபுத்தூர் நெல் வியாபாரி முருகன், இரண்டு நாட்களுக்கு முன் குடும்பத்துடன் வெளியூர் சென்றார். நாயுடு தெருவிலுள்ள அவருடைய வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. 40 பவுன் நகைகள் திருட்டு போயிருப்பதாக ஸ்ரீவில்லிபுத்தூர் டவுண் காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்திருக்கிறார்.
“ஒரே இரவில் ஒரே தாலுகாவில் அடுத்தடுத்து திருட்டு சம்பவங்கள் நடந்திருக்கின்றன என்றால் என்ன அர்த்தம்? தீபாவளி நெருங்கி விட்டதல்லவா? திருடர்களும் பிசியாகிவிட்டனர். பக்கத்து தாலுகாவிலுள்ள சேத்தூரிலும், திருடன் ஒருவன் நள்ளிரவில் வீடு புகுந்து சிவசக்தி என்ற மூதாட்டியிடம் 5 பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துக்கொண்டு ஓடிவிட்டான். விருதுநகர் மாவட்டத்தில்தான் இந்த மூன்று சம்பவங்களும் நடந்திருக்கின்றன.” என்று நண்பரிடம் கண் சிமிட்டினாராம் அந்த அதிகாரி.
போலீஸ்காரர்கள் சிலர் திருடர்களிடம் எப்படி போனஸ் வாங்குகிறார்களாம்?
“டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் போன்றவர்கள் நேரடியாக திருடர்களிடம் தொடர்பு வைத்துக்கொள்ள மாட்டார்கள். கான்ஸ்டபிள் லெவலில் உள்ளவர்கள்தான் போன் தொடர்பில் இருப்பார்கள். பின்னாளில், மாமூலோ, போனஸோ வாங்கிய விவகாரம் கண்டுபிடிக்கப்பட்டாலும், மாட்டுவது கான்ஸ்டபிள்கள்தான். அதிகாரிகள் தப்பித்துவிடுவார்கள். திருடனின் வெயிட்டைப் பொறுத்து போனஸ் கறக்கப்பட்டுவிடும். சின்ன லெவலில் இருந்து, அதாவது ஜவுளிக்கடையில் துணி எடுப்பது போலீஸ்காரர்கள் என்றால், பில்லுக்குப் பணம் செலுத்துவது திருடர்களாக இருப்பர். பெரிய லெவல் என்றால், நகைக்கடையில் போலீஸ்காரர்கள் வாங்கும் நகைகளுக்கு திருடர்கள் பில் செட்டில் செய்வது விடுவார்கள். போனஸை பணமாக வாங்குவதெல்லாம் ரொம்ப ரொம்ப லோ லெவல்..” என்று நம்மிடம் திரியைப் பற்ற வைத்தது ஒரு கான்ஸ்டபிள்தான்.
திருடன் – போலீஸ் விளையாட்டு சின்ன வயதிலிருந்தே நாம் ஆடி வருவதுதான்! திருடனும் தீபாவளி போனஸும் பலரும் அறிந்திடாத சங்கதியாக உள்ளது. அப்புறம் இன்னொரு விஷயம்.. மேற்கண்ட கொள்ளைகளுக்கும் அந்த லிமிட்டிலுள்ள காவல்துறையினருக்கும் ‘முடிச்சு’ போட்டு விடாதீர்கள்!