ADVERTISEMENT

தேங்கி நிற்கும் மழைநீரால் அவதி; சேற்றை வாரி இறைத்து போராட்டம்!!

06:35 PM Nov 09, 2018 | sundarapandiyan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகேயுள்ள வடகரை ஊராட்சிக்குட்பட்ட நந்திமங்கலம் காலனியில் 1,000-த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழையால், தெருக்களில் மழைநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் டெங்கு, பன்றி காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்புள்ளதால், அப்பகுதி மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் தேங்கிய மழைநீரில் நின்று ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அதிகாரிகள் யாரும் வராததால் சேற்றை வாரி இறைத்து போராட்டம் நடத்தி விரக்த்தியுடன் கலைந்து சென்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT