Skip to main content

ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் கால அகழி...பட்டா இருக்கு என்று பீதியை கிளப்பும் ஆக்கிரமிப்பாளர்கள்!

Published on 25/08/2019 | Edited on 25/08/2019

பந்தநல்லூர் கோயிலை சுற்றியுள்ள அகழியை உயர்நீதிமன்ற உத்தரவின்படி உடனடியாக தூர்வார வேண்டும் என சமூக ஆர்வலர்களும், விவசாய சங்கங்களும், பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவிற்கு உட்பட்ட பந்தநல்லூரில் புகழ்பெற்ற பசுபதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. அந்த கோயிலை சுற்றி ஆயிறம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட அகழியும் இருக்கிறது. சமீபகாலமாக அகழியின் பெரும்பாலான பகுதிகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி அதற்கான அடையாளத்தை இழந்து காணப்படுகிறது.

thanjavur district Thousand Years Old Chola Trench Strike the peoples

 

இந்த நிலையில் பந்தநல்லூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்.வெங்கட்ராமன் உள்ளிட்ட சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில், பந்தநல்லூர் அகழியை தூர்வாரி நீராதாரத்தை காக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் " அகழியை மூன்று வாரத்திற்குள் தூர்வார வேண்டும், அகழியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்" என உத்தரவிட்டது. அதன்படி ஆக்கிரமிப்புகள் இரண்டு வார காலமாக அகற்றப்பட்டு வருகின்றன.
 

இதற்கிடையே ஆக்கிரிமிப்பாளர்கள் சிலர் " தங்களுக்கு அகழியில் பட்டா இருக்கிறது என 30- க்கும் மேற்பட்டோர் தடை கேட்டு நீதிமன்றம் சென்றனர். நீதிமன்றத்தில் தனி நீதிபதி அமர்வில் விசாரிக்கப்பட்டு நான்கு வாரங்களுக்கு அவர்களின் இடத்தில் உள்ள ஆக்கிரமைப்புகளை அகற்ற வேண்டாம் என இடைக்கால உத்தரவிட்டுள்ளது.

 

thanjavur district Thousand Years Old Chola Trench Strike the peoples

 


அதன் பின்னர் 23.8.2019 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்று வருவாய்த்துறை அலுவலர்கள் பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலை சுற்றியுள்ள அகழியை தூர்வார மூன்று ஜே.சி.பி இயந்திரங்களோடு வந்தனர். இதை அறிந்த ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் அவர்களை பணி செய்ய விடாமல் இயந்திரத்தின் முன் நின்று கூச்சலிட்டனர். இந்த செய்தி காற்றில் தீயாக பரவ பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சியினரும், வணிகர்களும் கோபத்தின் உச்சத்திற்கே சென்று கோயிலுக்கு செல்லும் நுழைவு வாயில் அருகே பந்தநல்லூர் குடந்தை சாலையில் திரண்டனர்.

சுமார் 500 பேர் திரண்டு வந்து நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அகழியை தூர்வார வேண்டும் எனவும், சென்னை உயர் நீதிமன்ற ஆணையை நிறைவேற்ற வேண்டும் என்று கோஷமிட்டு கொண்டு பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து சில மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு திருவிடைமருதூர் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிரிமிப்பாளர்களுக்கு, இன்னும் ஒரு வாரம் காலக்கெடு இருக்கிறது. அதற்குள் அவர்கள் ஆக்கிரமிப்பை அவர்கள்  அகற்ற வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்குள் அகற்றவில்லை என்றால் நீதிமன்ற ஆணையை நிச்சயமாக நாங்கள் நிறைவேற்றுவோம் என்று உறுதி அளித்ததன் பேரில் மறியலை தற்காலிகமாக கைவிட்டனர்.

 

thanjavur district Thousand Years Old Chola Trench Strike the peoples




பந்தநல்லூர் பகுதி சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கூறுகையில், " நீர்நிலைகளின் முக்கியத்துவத்தை கருதி தமிழக அரசே நீர்நிலைகளை புதுப்பிக்கிறது. பல இடங்களில் நீதிமன்றமும்,  நீதிபதிகளுமே சொந்த செலவில் தாங்களே முன்னின்று குளங்களை, ஏரிகளை தூர்வாரி வருகின்றனர். அரசர் காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு பொக்கிஷம். இதை ஆக்கிரிமித்து ஒரு சிலர் கடைகளையும், வீடுகளையும்,  கட்டிக்கொண்டு பட்டா இருக்கிறது என பொய் பிரச்சாரம் செய்து கொண்டு, நீர்நிலைகளை தூர்வார விடாமல் தடுத்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் நீதிமன்ற உத்தரவை ஏற்று ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வாரவில்லை என்றால் பந்தநல்லூரை சுற்றியுள்ள நாற்பது கிராம பொதுமக்களையும், அரசியல் கட்சியினரையும், மாணவர்களையும் ஒன்றுதிரட்டி பெருந்திரல் போராட்டம் நடத்துவோம்." என்கிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.