தென்காசி மாவட்டம் ஆனைக்குளம் அருணாசலப்புரம் வடக்கு வீதியினை சேர்ந்த செல்வராஜின் மகன் கண்ணன். 19 வயதே ஆன இவன் கண்ணைக்கவரும் வண்ண ஆடைகளை உடுத்தி நாளொரு வண்ணமாக kannansnkr எனும் ஐ.டி.யில் 947 வீடியோக்களைப் பதிவிட்டு டிக் டாக்கில் காதல் மன்னனாக பிரபலம். டிக் டாக்கில் இந்த காதல் மன்னனை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை மட்டும் ஏறக்குறைய 4 லட்சம் நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவனை நேற்று (02/03/2020) கைது செய்த சேர்ந்தமரம் காவல்துறையினர், "சுரண்டை, வீரசிகாமணி மற்றும் சேர்ந்தமரம் போன்ற பகுதிகளில் சாலையோரம் நடந்துவரும் பள்ளி, கல்லூரி மாணவிகள், மற்றும் பொதுமக்களை அவர்கள் அனுமதியில்லாமல் வீடியோ எடுத்து டிக் டாக்கில் பதிவிட்டதும், பெண்களை ஏமாற்றி பணம் பறித்ததுமாக" வழக்கினைப் பதிவு செய்து பாளையங்கோட்டை சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
"எனக்கும் அவனுக்கும் டிக் டாக் மூலம் தான் பழக்கம் ஏற்பட்டது. அவனுடைய வீடியோவினைப் பார்த்து லைக் போட, அதனைக் கண்டு அவன் என்னுடைய இன்பாக்ஸிற்கு வந்து மெஜேஜ் அனுப்ப நெருங்கி பழக நேரிட்டது. இதனால் அவனுடன் வீடியோ சாட்டும் செய்ய வேண்டியதாயிற்று. அவன் அந்த வீடியோவினை பதிவு செய்து வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்ட ஆரம்பித்தான். பணம் தரவில்லையென்றால் வீடியோவினை வெளியிடுவதாகவும் மிரட்டினான்.