ADVERTISEMENT

டெண்டர் முறைகேடு வழக்கு; இபிஎஸ்க்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி கூடுதல் மனு! 

10:36 AM Aug 03, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சாலை ஒப்பந்தங்கள், திட்டங்களை தனது நெருங்கிய உறவினர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கியது உலக வங்கியின் வழிகாட்டுதல்களுக்கு முற்றிலும் எதிரானது என்று டெண்டர் முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனுவைத் தாக்கல் செய்துள்ளார் தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளர் ஆர்.எஸ்.பாரதி.

ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவில், "சாலைத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் எல்லாம், குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. அவை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்களின் சொந்தமான நிறுவனங்கள் ஆகும். அனைத்து ஆவணங்களைச் சரிபார்த்து தான் சி.பி.ஐ. விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான எடப்பாடி பழனிசாமியின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்" எனக் கோரியுள்ளார்.

மேலும், முதலமைச்சர் பதவியைப் பயன்படுத்தி தனக்கு எதிரான விசாரணையை தாமதப்படுத்தவும், அதனை தடம்புரளச் செய்யவும் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முயற்சிதான் மேல்முறையீட்டு வழக்கு என்பதால், அதனை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி கோரியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT