அப்பொழுது ஒரு சிறுவனின் முன்னிலையில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு போடுவது போன்று சினிமா வசனம் பேசும் டிக்டாக் வீடியோ, குழந்தையை தரையில் படுக்க வைத்து கயிற்றால் தன் உடலை கட்டிக்கொண்டு ஆபத்தை விளைவிக்கும் வகையில் கையிற்றில் தொங்கியபடி ஜெயம் திரைப்படத்தில் வரும் ''கவிதையே தெரியுமா'' என்ற பாடலுக்கு டிக் டாக் வீடியோ செய்தது, கையைவிட்டுவிட்டு பைக்கை ஓட்டுவது போன்ற வீடியோக்களை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இந்த வீடியோக்களை பார்க்கும் இளைஞர்கள், சிறுவர்கள் இதுபோன்று முயற்சி செய்து விபரீதம் ஆகலாம் என காவல் கண்காணிப்பாளர் அபிநவ் சம்பந்தப்பட்ட டிக்டாக் இளைஞரான அஜித்தை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.
பைக்கோடு அஜித் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ராமநத்தம் போலீசார் அந்த இளைஞரை சிறையில் அடைத்துள்ளனர். காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விட்ட டோஸில் கனத்த இதயத்துடன் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார் கடலூர் திட்டக்குடி புள்ளிங்கோ அஜித்.