Skip to main content

அடாவடி ஆய்வாளர் ஆயுதபடைக்கு மாற்றம்!

Published on 16/10/2019 | Edited on 16/10/2019

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கஞ்சிதொட்டி முனை பகுதியில் கடந்த இரு நாட்களுக்கு முன் சிதம்பரம் காவல்நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் வேல்முருகன், காவலர் மரியசார்லஸ் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது புவனகிரியில் இருந்து ஒரு தம்பதியினர் தனது இரு குழந்தைகளை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு தீபாவளி பண்டிக்கைக்கு பொருட்கள் வாங்க சிதம்பரத்திற்கு வந்துள்ளனர்.

 

cuddalore incident.... Transition to Inspector Armed Forces

 

அப்போது தம்பதியினரை தடுத்து ஆய்வு செய்த காவலர்களிடம் ஹெல்மெட், வண்டிக்கு உரிய ஆவண நகலை காட்டியுள்ளனர். அப்போது காவலர்கள் ஒரிஜினல் வேண்டும் என்றும் குழந்தைகளை அழைத்துவர அனுமதி இல்லை என்று கூறியுள்ளனர். இதனால் தம்பதியினருக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவரது மனைவி குழந்தைகளை வைத்துக்கொண்டு இந்த ஒரு தடவை மன்னித்துவிடுங்கள் என்று கூறி கெஞ்சியதை அருகில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவு செய்தனர். இது வைரலாகியது.

இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சிதம்பரம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு சமூக சீர்கேடான சம்பவங்கள் காவல்துறையினரின் அனுமதியோடு நடைபெறுகிறது. இதனை தடுக்கமுடியாத காவல்துறை மனைவி குழந்தைகளுடன் வருபவரை மடக்கி அசிங்கபடுத்துவது சரியா? அதேநேரத்தில் சிலரிடம் ரூ100 வாங்கிவிட்டு வாய்பேசாமல் அனுப்புவது யாருக்கும் தெரியாதா? என கேட்டு பதிவு செய்து வருகிறார்கள்.

இதற்கு காவல்துறையில் உள்ளவர்கள் சிலர் சட்டம் அதைதான் சொல்கிறது. ஆனால் அவர் சொன்னவிதம்தான்  சரியில்லை என்கின்றனர். இந்த சம்பவம் பொதுமக்களிடம் மட்டுமின்றி காவல்துறையின் உயர் அதிகாரிகள்  மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடலூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அபிநவ்ஸ்ரீ தணிக்கையின் போது ஒழுங்கினமாக நடந்துகொண்டதிற்கு இவர்கள் இருவரையும் ஆயுதபடைக்கு மாற்றியுள்ளார். இதனை அனைவரும் வரவேற்று காவலர்களுக்கு பொதுமக்களிடம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்று புரிதலை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.