ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், "பள்ளிகள் திறப்பைவிட மாணவர்களின் உயிர்தான் முக்கியம். 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளப் பள்ளிகளை உள்ளாட்சித் துறை உதவியுடன் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமிதான் முடிவு எடுப்பார்" என்றார்.
இதனிடையே, அக்டோபர் 15- ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க ஏற்கனவே அனுமதி அளித்திருந்த மத்திய அரசு, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.